Power Shutdown in Chennai: அடகடவுளே.. இன்றைக்கு பார்த்து இவ்வளவு இடங்களில் 5 மணிநேரம் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Chennai Power Cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Guindy Power Cut
கிண்டி:
ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் 1வது முதல் 34வது தெரு, வேளச்சேரி பிரதான சாலை, ரேஸ் வியூ காலனி 1 முதல் 3வது தெரு, பாரதி நகர், ஐந்து ஃபர்லாங் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை, வண்டிக்காரன் சாலை, நேரு நகர், TNHB காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், இந்திரா காந்தி நகர் 1 முதல் 6வது தெரு, கணேஷ் நகர், ரங்கநாதன் தெரு, மதியழகன் தெரு, கண்ணகி தெரு, மாதவன் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு, வேளச்சேரி, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மாஸ்க் காலனி, நரசிங்கபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.