Tamil Nadu Rains: 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மழை; அலர்ட் மெசேஜ்.!
சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
chennai rain
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hhr88aebjdhk80eanxtx6jf6/chennai-rain_300x169xt.jpg)
Tamil Nadu Rains Update
இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Tamil Nadu Rains
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- School College Leave: வரும் 26ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.!
Tamil Nadu Rains IMD
இந்நிலையில், தமிழ்நாட்டில் 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.