சின்ன பையன் கூட என்று பார்க்காமல் ஆண்ட்டி ஓயாமல் பாலியல் தொல்லை கொடுத்தாங்க! 28 வயது பெண் சிக்கியது எப்படி?
போடி அருகே குழந்தைகள் காப்பகத்தில் 10 வயது மாணவனுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sexual Harassment
தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பாகத்தில் 30க்கும் மேற்பட்ட தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பாகத்துக்கு பல்லவராயன்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அதில் 10 வயது சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், இந்த சிறுவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோயிலில் தூங்கிய 85 வயது கிழவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர வாலிபர்கள்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
Crime News
இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிறுவனிடம் விசாரித்தார். அப்போது காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மார்ச்சர் செய்து வருவதாக சிறுவன் கூறினான். இதை சற்றும் எதிர்பாராத இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்த ஊழியர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் கொடுத்தார்.
இதையும் படிங்க: illegal Love Crime: மாமியார் மேல அவ்வளவு வெறியா? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை.! மருமகன் கைது.!
Women Arrest
இந்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு காப்பாக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.