Saif Ali Khan Hospitalised: நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் தற்போது முழங்கால் வலி காரணமாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சைஃப் அலி கான். இவருக்கு ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய கூறி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அடுத்தடுத்து ஓய்வில்லாமல் படங்களில் நடித்து வந்ததால், இவரால் உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யமுடியாமல் போனது.
இந்நிலையில் தற்போது சில முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வரும் சைஃப் அலி கான் ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது, முழங்காலில் மீண்டும் அடிப்படவே ஏற்பட்ட வலியின் காரணமாக, மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் மற்றும் தென்னிந்திய ரசிகியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சைஃப் அலி கான் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவலில், அவரது உடல் நிலை சீராக இருந்தாலும் முழங்காலில் அதிகப்படியான வலி உள்ளதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரின் மனைவி கரீனா கபூர் தற்போது சைஃப் அலி கானுடன் உள்ளார்.
சைஃப் அலி கான் ஜூனியர் என்.டி.ஆர். RRR படத்திற்கு பின்னர் நடித்து வரும் 'தேவ்ரா' படத்தில் முரட்டு தனமான வில்லன் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் போது, சைஃப் அலிகானின் முழங்கால் மற்றும் தோளில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதுமட்டும் இன்றி விஷால் பரத்வாஜ் நடிக்கும் 'ரங்கூன்' படப்பிடிப்பின் போதும் பல முறை சைஃப் காயமடைந்தார். வெளியிடங்களுக்கு செல்லும் போது கூட க்ரீப் பேண்டேஜ் அணிந்து காணப்பட்டார். ஆனால் தற்போது இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.