பிக்பாஸை விட்டு வெளியேறியதும்... வெக்கேஷன் மோடில் மாயா, பூர்ணிமா, அர்ச்சனா! எங்க போய் இருக்காங்க தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட... மூன்று பெண் போட்டியாளர்களும், தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு வெக்கேஷன் சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்... தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய நண்பர்களை சந்தித்து ஒருபுறம் நட்பு பாராட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் வெகேஷனுக்காக வெளி ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதா மூன்று முக்கிய போட்டியாளர்களான மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, ஆகியோர் தங்களின் வெக்கேஷனை கழிக்க எங்கு சென்றுள்ளனர் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்திற்கு சர்வதேச படவிழாவில் கிடைத்த கௌரவ விருது!
பிக்பாஸ் வீட்டில் இணை பிரியாத தோழிகளாக வலம் வந்த மாயாவும் பூர்ணிமாவும், வெளியே வந்த பிறகும் அவ்வப்போது நேரில் சந்தித்து, நட்பு பாராட்டி வந்த நிலையில் வெக்கேஷனுக்கு செல்லும் போது மட்டும், பூர்ணிமாவை கழட்டி விட்டு விட்டு, வெளிநாட்டுக்கு பிறந்துள்ளார். அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியே வர மாயா தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.
பூர்ணிமா ரவி, தனக்கு மிகவும் பிடித்த வயநாடுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா, மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தன்னை சில் பண்ணிக்கொள்ள கொடைக்கானலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வெக்கேஷனை முடித்து கொண்டு வந்த பின்னரே... மூவரும் தங்களின் பணிகளில் மீண்டும் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.