புடவைகளுக்காக ஒரு வீடே வைத்திருக்கும் பிக்பாஸ் ரக்ஷிதா மகாலட்சுமி.! எத்தனை புடவை வச்சிருக்காங்க தெரியுமா?
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி தன்னுடைய புடவைகளுக்காக மட்டுமே, பெங்களூரில் தனியாக வீடு ஒன்றை வைத்துள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Thamizha Thamizha Show
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, அதிகமாக சேலை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள் மற்றும் புடவை வியாபாரிகள் இடையே விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொண்ட பெண்கள் பலர் தங்களிடம் 1000 புடவை உள்ளது, 2000 புடவை உள்ளது என கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.
Vijay tv Rachitha Mahalakshmi
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரக்ஷிதா மகாலட்சுமியும் கலந்து கொண்டார். தொகுப்பாளர் அனைவரையும் பார்த்து, 1000 புடவைகளுக்கு மேல் யாரெல்லாம் வைத்திருக்கிறீர்கள் என கேட்டபோது, நானும் கை தூக்கலாமா என சிறப்பு விருந்தினராக வந்திருந்த மகாலட்சுமியின் கைகளை உயர்த்தினார்.
Rachitha Mahalakshmi have 5000 Sarees:
நீங்களுமா? என ஆச்சர்யத்துடன் தொகுப்பாளர் கேட்க, "நீங்க 1000 புடவையுடன் நிறுத்திடீங்க... நான் ஒரு 5000 புடவை வைத்திருப்பேன் என கூறி அதிர்ச்சி கொடுத்தார் ரக்ஷிதா. மேலும் சில சமயங்களில் நான் ஏதாவது கடைகளுக்கு சென்று பார்க்கும் போது, என்னுடைய அசிஸ்டெண்ட்ஸ்... அக்கா நம்ப வீட்டுல இருக்குற புடவைகளை விட, இங்கு குறைவாக உள்ளது என கூறி கலாய்த்துக்கொண்டிருப்பார்கள், அந்த அளவுக்கு என்னிடம் அதிகமான புடவைகள் உள்ளது.
Rachitha Mahalakshmi Saree Collections:
மேலும் தன்னுடைய புடவைகளுக்காகவே, பெங்களூரில் 3 BHK பிளாட் ஒன்றை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு புடவையும் ரூ.5000 விலை இருக்கும். சிலர் தன்னுடைய புடவையை பார்த்து விட்டு, இந்த புடவை தனக்கு வேண்டும் என கேட்டால் அதனை ஆன் லைனிங் விற்பனை செய்து விடுவேன். இதனால் நான் ஒரு சேல்ஸ் மேன்னாகவும் மாறிவிட்டேன் என ரஷிதா கூறியுள்ளார். ஆன்லைனில் சேல்ஸ் செய்தது போக 5000 புடவை வைத்துள்ளதாக ரக்ஷிதா தெரிவித்துள்ளார்.
Rachitha Mahalakshmi maximum saree rate:
மேலும் தன்னிடம் அதிகபட்சம் காட்டான் புடவைகள் தான் இருக்கும். கைத்தறியில் நெய்யப்பட்ட புடவைகள் உடுத்த எனக்கு மிகவும் பிடிக்கும். அதிக விலையில் என்னிடம் ஒரே ஒரு பியூர் மைசூர் சில்க் சாரி உள்ளது அதன் விலை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என ரக்ஷிதா மகாலட்சுமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.