சம்பாதிக்கும் பணம் கையில் தங்கவில்லையா..? லட்சுமி கடாட்சம் பெறுக 'இத' செய்யுங்கள்!
உங்களுக்கு பணப் பிரச்சனைகள் இருந்தால், லட்சுமி தேவியின் ஆசியைப் பெற, வீட்டில் சில பொருட்களை வைத்தால் மட்டும் போதும். பணப் பற்றாக்குறை ஏற்படாது.
இன்றைய காலகட்டத்தில், பணம் இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்கவே முடியாது. ஏனென்றால், அது நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். இதனால்தான் பணம் சம்பாதிக்க மக்கள் இராபகலாக உழைக்கிறார்கள்.
ஆனால், சிலர் பல சமயங்களில், எவ்வளவு தான் சம்பாதித்தாலும், நிதி பிரச்சனைகளை சந்திக்க தான் செய்கிறார்கள். பணம் வரும் ஆனால் அது வீட்டில் நிலைக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், என்ன செய்வது என்று புரியவில்லையா? பணம் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கும் தொடர்ந்தால், இங்கு சில பரிகாரங்களைச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை நீங்கள் பின்பற்றினால் உங்கள் நிதி நிலைமை மேம்படும். அந்த தீர்வுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
விநாயகப் படம்: விநாயகப் பெருமானின் படம் (அ) சிலையை வீட்டில் வைத்தால் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், விநாயகப் பெருமான் தான் முதலில் வழிபடக்கூடியவராகவும், தடைகளை அழிப்பவராகவும் கருதப்படுகிறார். மேலும், எந்த ஒரு மங்களகரமான வேலைகளை செய்யும் முன் முதலில் விநாயகப் பெருமானை வழிபடுவார்கள். ஆகவே, பணப்பற்றாக்குறை நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இன்றே உங்கள் வீட்டில் விநாயகப் பெருமானின் படம் (அ) சிலையை வையுங்கள்.
சங்கு: ஆன்மீகம் படி, எந்த வீட்டில் சங்கு இருக்கிறதோ அந்த வீட்டில் வாஸ்து தோஷங்கள் இருக்காது மற்றும் பணப் பிரச்னையும் ஏற்படாது. சாஸ்திரங்களின்படி, சங்கு என்பது விஷ்ணுவுக்கும், லட்சுமி தேவிக்கும் மிகவும் பிடித்தது ஆகும். அதுமட்டுமின்றி, நேர்மறை ஆற்றல், உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக சங்கு கருதப்படுகிறது.
லட்சுமி தேவி மற்றும் குபேர்: உங்கள் வீட்டில் செல்வம் பெருக, குபேரர் மற்றும் அன்னை லட்சுமி தேவி ஒன்றாக இருக்கும் படத்தையும் வீட்டில் வையுங்கள். ஏனெனி, அன்னை லட்சுமி செல்வத்தின் கடவுள் மற்றும் குபேரன் வருமானத்தின் கடவுள் ஆவார். இத்தகைய சூழ்நிலையில், உங்களது பணப் பிரச்சனை நீங்கும்.
இதையும் படிங்க: இரவில் தூங்கும் முன் இத மட்டும் செஞ்சா போதும்...வீட்டில் பணப் பற்றாக்குறை வரவே வராது...!!
மயில் இறகு: வீட்டில் மயில் தோகையை வைத்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும். மேலும் இதனால் வீட்டில் வருமானம் அதிகரிக்கும், செலவுகள் குறையும்.
இதையும் படிங்க: 1 ரூபாய் நாணயம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.! இனி தலை குனிவுக்கு அவசியம் இல்லை..!!
புல்லாங்குழல்: உங்கல் வீட்டு பூஜை அறையில் புல்லாங்குழல் வைத்தால், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் இருக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி, தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D