ஆஹா கல்யாணம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'பாரதி கண்ணம்மா' தொடர் இளம் நடிகை! இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ஆஹா கல்யாணம் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த இளம் நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
ஐஸ்வர்யாவை காதலிக்கும் சூர்யா, அவர் கடைசி நேரத்தில் திருமண மண்டபத்தில் இருந்து தன்னுடைய தம்பியுடன் எஸ்கேப் ஆகி விடுவதால், வேறு வழி இல்லாமல் தங்கை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே மகாவும்... சூர்யாவும் எதிர் எதிர் துருவங்களாகவே இருப்பதால், திருமணத்திற்கு பிறகும் சூர்யா மகாவை வெறுக்கிறார். ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் மகா என்று நினைக்க, தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக ஐஷு மண்டபத்தில் இருந்து வெளியேற சூர்யாவின் தம்பி தான் காரணம் என்பதை நிரூபிக்கிறார்.
தற்போது சூர்யா மற்றும் மகா இடையே நல்ல புரிதல் இருந்தாலும், தன்னுடைய அம்மா பேச்சை மீறி சூர்யாவால் மகாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே மகா ஒரு விருந்தினர் தான் அவளோடு எப்போதும் வாழ போவதில்லை என்பதை கூறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, ஐஸ்வர்யா கர்ப்பமாகி இருப்பதாக கூறி ட்ராமா செய்து, கவுதமை திருமணம் செய்து கொண்டு மகாவை வேலை காரி போல் ட்ரீட் செய்கிறார்.
மகாவின் நகை டிசைன் செய்யும் திறமை தற்போது... சூர்யாவுக்கு தெரிய வர, அவரின் திறமை பலராலும் பாராட்டப்படும் அளவிற்கு வந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த சீரியல் மூன்று நாயகன் மற்றும் மூன்று நாயகிகளை மையமாக வைத்து ஒரு முக்கோண கதையாக எடுக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் கடைசி தம்பி விஜய் மீது மகாவின் தங்கை பிரபாவுக்கு கிரஷ் இருந்தாலும் இதுவரை அவர் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், பிரபாவுக்கு போட்டியாக... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை தற்போது ஆஹா கல்யாணம் தொடரில் ஷெரின் ஜானு என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நர்ஸ் வேடத்தில் துளசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.