வீட்டில் வாஸ்துபடி பணம், நகைகளை வச்சிருக்கீங்களா..? அப்ப தான் அதிஷ்டம் கிடைக்குமாம்.. உடனே செக் பண்ணுங்க!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பணம், நகைகள் அல்லது வேறு ஏதேனும் மதிப்பு மிக்க பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கே உள்ளன. அவை..
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும் வாழ்க்கையில் சாதகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு நபரின் முன்னேற்றம், ஆரோக்கியம் போன்றவற்றை நிர்ணயிக்கும்.
எனவே, லட்சுமி தேவியின் அருள் வீட்டில் எப்போதும் நிலைத்திருக்க, வாஸ்துவின்படி வீட்டில் உள்ளவை எல்லாம் சரியான இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். அவற்றில் ஒன்றுதான் பணம், நகை அல்லது மதிப்புமிக்க பொருட்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இவற்றை எங்கு வைக்க வேண்டும் என்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கே உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வடக்கு திசை: வடக்கு திசை செல்வத்தின் அதிபதி மற்றும் கடவுளான குபேரின் திசையாக கருதப்படுகிறது. வாஸ்து படி, நீங்கள் உங்கள் மதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்கும் பணப்பெட்டி எப்போதும் வடக்கு திசையில் தான் இருக்க வேண்டும். இவற்றை இந்த திசையில் வைத்திருப்பது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை இரட்டிப்பாக்கும் என்பது நம்பிக்கை.
தெற்கு நோக்கி இருப்பது நல்லதல்ல: பணப்பெட்டியை நீங்கள் வடக்கு திசையில் வைத்தாலும், பணப்பெட்டியின் கதவு தெற்கு நோக்கி பார்த்து இருக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி தெற்கிலிருந்து பயணம் செய்து வடக்கில் குடியேறுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த திசையில் கதவை வைத்திருப்பதன் மூலம், பணம் வீட்டில் ஒருபோதும் தங்காது.
இதையும் படிங்க: Vastu Tips : நிதி நெருக்கடி பிரச்சினை நீங்க முதல்ல இந்த வாஸ்து தவறுகளை சரி செய்யுங்க..!!
கிழக்கு திசையிலும் வைக்கலாம்: சில காரணங்களால் உங்களால் வடக்கு திசையில் வைக்க முடியவில்லை என்றால், கிழக்கு திசையில் வைக்கலாம். இந்த திசை பாதுகாப்பாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. கடைகளை பொறுத்த வரை காசாளர் தென்மேற்குத் திசையை நோக்கி அமர்ந்திருந்தால், பண பெட்டகத்தை அவரது இடது புறத்திலும், அவர் கிழக்கு நோக்கியிருந்தால், அதை அவரது வலது புறத்திலும் வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!
இந்த திசைகளில் வைக்க வேண்டாம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் எந்த மூலையிலும் பண பெட்டகத்தை வைத்திருப்பதை தவிர்க்கவும். குறிப்பாக வடகிழக்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் ஒருபோதும் வைக்கக்கூடாது. அதுபோல, தெற்கு திசையிலும் வைக்கக்கூடாது. இது துரதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், பணத்தை விரைவாக கரைத்து விடுவதாக நம்பப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D