கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!
நீங்கள் நிதி பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால், கற்பூரத்தை எப்போதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
இந்து மதத்தில் கற்பூரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு மற்றும் அது புனிதமான பொருளாகவும் கருதப்படுகிறது. மேலும், அதிலிருந்து வரும் நெருப்பு எதிர்மறை ஆற்றல்களை விரட்டுவதாகவும், கடவுளை திருப்திப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி, எல்லா இந்து சடங்குகளிலும் கற்பூரம் பயன்படுத்தப்படுவது வழக்கம். உங்களுக்கு தெரியுமா.. இதில் இருக்கும் ஆன்டிபயாடிக் நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
அந்தவகையில், கற்பூரத்தை வாஸ்துபடி, நீங்கள் செல்லும் இடங்கங்களுக்கு எடுத்து சென்றால், நிதி சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும், எந்த கஷ்டங்களும் உங்களுக்கு வராது என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: Camphor : என்னங்க சொல்றீங்க..கற்பூர வாசனையை சுவாசித்தால் நல்லதா.! உண்மையை தெரிஞ்சுக்கலாம் வாங்க!
எனவே, வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீங்கள் வேலையில் மன அழுத்தத்தில் இருக்கும்போதோ அல்லது நேர்முகத்தேர்வுக்குச் செல்லும்போதோ கற்பூரத்தை கீழே சொல்லப்பட்டது போல எடுத்துச் சென்றால், நல்ல
பலன் கிடைக்கும் ஐதீகம்.
இதையும் படிங்க: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இந்த அற்புதமான கற்பூர பரிகாரங்கள் முயற்சிக்கவும்..!
கற்பூரத்தை, ஆண்கள் சட்டை பை அல்லது கால் சட்டையிலும், பெண்கள் தங்கள் பணப்பையிலும் வைத்திருப்பது நன்மை பயக்கும். அதுபோல நீங்கள் அதை ஒரு சிவப்பு துணியில் கட்டி வெளியே எடுத்துச் செல்லும்போது உங்களுடன் வைத்துக் கொண்டால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் மற்றும் உங்கள் கனவுகள் நினைவாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D