மோடி, சச்சின், ஜெய் ஷா பெயரில் விண்ணப்பங்கள் – ஷாக்கான பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, சச்சின், தோனி ஆகியோரது பெயரில் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
Indian Cricket Team Head Coach
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் 29 ஆம் தேதி நிறைவடையும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தேடலில் பிசிசிஐ ஈடுபட்டது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hymksma0n3ekhc3pca8n5y7q/fotojet--1-_300x375xt.jpg)
Team India Head Coach
தலைமை பயிற்சியாளருக்கான பட்டியலில் ரிக்கி பாண்டிங், மகீலா ஜெயவர்தனே, விவிஎஸ் லட்சுமணன், ஸ்டீபன் ஃபிளெமிங், ஜஸ்டின் லங்கர் ஆகியோரது பெயர் அடிபட்டது. இந்த பட்டியலில் கவுதம் காம்பீர் டாப்பில் இருப்பதாக கூறப்பட்டது.
Indian Cricket Team Head Coach
இந்த நிலையில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய் ஷா, சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரது பெயரி போலியாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
Indian Team Head Coach
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடந்த 27 ஆம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட 3600 விண்ணங்கள் வரையில் போலியாக வந்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இதில், சச்சின், மோடி, அமித் ஷா, சேவாக், தோனி ஆகியோரது பெயரிலும் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.