உன் உசுரு என் அம்மா போட்ட பிச்சை! இனி அப்படி நடக்க கூடாது... எச்சரித்த ஷண்முகம்! அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சண்முகத்துக்கு விதவிதமாக விருந்து பரிமாற அதை பார்த்து சௌந்தரபாண்டி ஷாக்கான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சௌந்தரபாண்டி சண்முகம் இலையை வெறிக்க பார்க்க சாப்பிட போன சண்முகம் சாப்பிடாமல் நிறுத்தி விட பாக்கியம் என்னாச்சு என கேட்கிறாள். அங்க உன் புருஷனை பாரத்தை அவர் அப்படி பார்த்தா நான் எப்படி சாப்பிடுவது என்று சொல்ல பாக்கியம் சௌந்தரபாண்டியை அங்கிருந்து அழைத்துச் செல்கிறாள்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hg8vdqynzg4g759ghrf2fe1s/q2_300x168xt.jpg)
அடுத்து தோழிகள் எல்லோரும் இந்த மாதிரி சாப்பிட்டா எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விடுங்க என்று சொல்ல பரணி அதிர்ச்சியாக சண்முகம் ஐயையோ நான் ஊட்டி விட மாட்டேன் என் கைய புடிச்சு கடிச்சு வச்சுடுவா என்று சொல்ல பரணி அதற்கு எதிர்மறையாக நீ ஊட்டு நான் சாப்பிடுகிறேன் என சொல்கிறாள்.
அதன் பிறகு சண்முகம் ஊட்டி விட பரணி சாப்பிட அதை பார்த்து தோழிகளும் சண்முகமும் சந்தோஷம் அடைகின்றனர். இவர்கள் கிளம்ப தயாராக பாக்கியம் சௌந்தரபாண்டியன் கையால் பணத்தை வைத்து கொடுத்து ஆசீர்வாதம் செய்ய சொல்ல சௌந்தரபாண்டி மறுப்பு தெரிவிக்கிறார்.
முத்துப்பாண்டி குடித்து விடுப்பா போய் தொலையட்டும் என்று சொல்லியும் சௌந்தரபாண்டி முடியாது என மறுக்க சண்முகம் அப்படின்னா நைட்டுக்கு சாப்பாடு ரெடி பண்ணு அத்தை இங்கேயே டேரா போட்டு விட வேண்டியது தான் என்று சொல்ல வேறு வழி இல்லாமல் சௌந்தரபாண்டி பணத்தட்டை கொடுத்து அனுப்புகிறார். அதை வாங்கிக் கொண்டே சண்முகம் அங்கிருந்து கிளம்பும்போது இன்னொரு முறை ஜெயில்ல போய் எங்க அம்மாவ பாக்கற வேலையை வச்சுக்காதீங்க, இப்ப நீங்க உயிரோடு இருக்க காரணம் எங்க அம்மா போட்ட பிச்சை என எச்சரித்துவிட்டு வருகிறார்.
Lokesh Kanagaraj: 5 படம் இயக்கிவிட்டேன்.. அதிரடியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்..!
மறுபக்கம் இவர்கள் வீட்டில் இல்லாத போது பரணியின் தோழிகளும் சண்முகத்தின் தங்கைகளும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இசக்கி இப்ப எல்லாம் பரணி ரூமுக்குள்ள போகணும்னாலே பயமா இருக்கு, எது கேட்டாலும் கோபப்படுறா என்று சொல்ல பரணி நல்ல பொண்ணு தான் நாங்க எல்லாம் டாக்டருக்கு படிச்சு பணத்தை சம்பாதிக்கணும்னு நினைச்சோம் ஆனால் சேவை செய்யணும்னு நினைச்சா என்று சொல்கின்றனர். ரத்னா அண்ணா அவ கழுத்துல தாலி கட்ட அவரால ஏத்துக்க முடியல என்று சொல்கிறாள்.
அடுத்து வீட்டுக்கு வரும் பழனி தோழிகளிடம் இன்னும் நீங்க கிளம்பலையா என்று சொல்ல இதோ கிளம்பிட்டோம் என்று ஊருக்கு கிளம்புகின்றனர். வைகுண்டம் ஊர்ல ஆற்றை தூறு வாருறாங்க எல்லாரும் மீன் பிடிக்க போவாங்க அதை பார்த்துட்டு போங்க என்று சொல்ல இவர்களின் சரி என்று சொல்ல பரணி அவர்களை திட்டி அனுப்பி வைக்கிறாள். அடுத்து குழந்தை ஒன்றுக்கு ரோட்டில் அடிபட்டு விட பரணி ஓடிப்போய் உதவி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D