பயமுறுத்துறாங்க! அவங்களுக்கு பிடிக்கல.. சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்!
ப்ரேமம் பட இயக்குனர், அல்போன்ஸ் புத்திரன் அதிரடியாக... சமூக வலைத்தளத்தில் இருந்து விலக உள்ளதை அறிவித்துள்ளார்.
Alphones Puthren
நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதை தொடர்ந்து, மீண்டும் நிவின் பாலியை வைத்து இவர் இயக்கிய மலையாள திரைப்படமான 'பிரேமம்' மாபெரும் வெற்றி பெற்றது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01f89nfghjv3jg2wycw55h46q6/alphones-puthren-jpg_300x171xt.jpg)
இப்படம் மலையாள திரையுலக ரசிகர்களை தாண்டி, அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இவர் இயக்கிய 'பிரேமம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூவருமே தற்போது தென்னிந்திய திரையுலகில் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஹீரோயினாக உள்ளனர்.
வாவ்... செம்ம கியூட் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!
பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர் 7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்திரன், பிருத்விராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன கோல்டு திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது கிஃப்ட் என்கிற படத்தை இயக்கி வரும் இவர் இதுவே தன்னுடைய கடைசி படம் என்பதையும் தெரிவித்தார்.
ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் என்கிற அரியவகை நோய்யால் பாதிக்கப்பட்டது தான் இதற்க்கு காரணம் என கூறி அதிர்ச்சி கொடுத்தார். அது மட்டும் இன்றி சமீப காலமாக இவர் போட்ட பதிவுகளும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இருந்து விலக உள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் இனி நான் எந்த ஒரு பதிவும் பதிவிட போவதில்லை. காரணம் என்னவென்றால் நான் சோசியல் மீடியாவில் பதிவிடும் பதிவுகள் என் அப்பா, அம்மா. என்னுடைய சகோதரிக்கு பிடிக்கவில்லை . என் உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் நிம்மதி என நினைக்கிறேன் அப்படியே இருக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.