லால் சலாம் சொதப்பியதற்கு காரணம் ரஜினிகாந்த் தானா? மொய்தீன் பாய் கேரக்டர் பற்றி ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி தகவல்
லால் சலாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அப்படம் குறித்த விமர்சனங்களுக்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
Aishwarya Rajinikanth
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். இதையடுத்து 7 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியே இருந்த ஐஸ்வர்யா, பின்னர் லால் சலாம் என்கிற பிரம்மாண்ட படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அப்படம் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி திரைக்கு வந்தது.
Lal salaam Rajini
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, வசூலிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில், லால் சலாம் படத்திற்கு வந்த விமர்சனங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம்விட்டு பேசியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அப்படம் தனக்கு கற்றுத் தந்த பாடம் என்ன என்பதையும் கூறி இருக்கிறார்.
Lal salaam Director Aishwarya
அதன்படி அவர் கூறியதாவது : “நான் லால் சலாம் கதை எழுதும் போது மொய்தீன் பாய் கேரக்டர் படத்தில் வெறும் 10 நிமிடம் வரும்படி தான் எழுதி இருந்தோம். அந்த கேரக்டரில் சூப்பர்ஸ்டார் வரும்போது அதை எங்களால் 10 நிமிடம் மட்டும் வைக்க முடியவில்லை. அந்த கேரக்டரை சுத்தி தான் படம் நகரும் நிலை ஆகிவிட்டது. அது தான் கரெக்டும் கூட. அவ்ளோ பெரிய இமேஜ் இருக்கிற ஒரு ஆள் உள்ள வரும்போது, அவரை சுற்றி தான் படம் இருக்க வேண்டும் என்கிற சூழல் உருவாகிவிட்டது.
இதையும் படியுங்கள்... Jyothika: '36 வயதினிலே' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் ஜோதிகா!
Lal salaam Moideen Bhai
இதற்காக ஸ்கிரிப்ட்டை மாற்றும் போது, இரண்டாம் பாதி முழுவதும் மொய்தீன் பாய் வரும்படி ஆகிவிட்டது. நாங்கள் ரெடி பண்ண ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டில், இண்டர்வெல்ல தான் மொய்தீன் பாய் வருவாரு, அதன்பின்னர் அவரது கேரக்டர் தான் படத்தை நகர்த்தி செல்லும். படம் பார்த்து முடித்ததும் கமர்ஷியல் காரணங்களுக்காக மொய்தீன் பாய்யை முதல் பாதியில் காட்ட வேண்டிய ஒரு கட்டாயம் வந்தது. இதனால் எடிட்டை மாற்றியமைக்க முடிவு செய்தோம்.
Aishwarya about Lal salaam criticism
படம் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்கள் முன் காட்சிகளை மாற்றியமைத்தோம். படத்தின் கதை ஸ்ட்ராங் ஆக இருந்தாலும் ரஜினிகாந்த் என்பவரை முதல் பாதியில் கொண்டுவந்ததால், கதை எங்கயுமே நிக்கமாட்டேங்குது. செந்தில் கேரக்டர் தான் படத்தின் கரு. ஆனால் சூப்பர்ஸ்டார் என்பவரை மொய்தீன் பாய் கேரக்டரில் காட்டிய பின்னர் யாருமே மற்றதை பார்க்க விரும்பல. அவரை எப்பயா காட்டுவீங்க அப்படிங்கிற மாதிரி ஆயிடுச்சு. கதை தலைவர் மேல ஓப்பன் ஆகிடுச்சுனா, அது தலைவர் மேலயே போகனும், அவரால் தான் முடியனும் அப்படிங்குற விஷயத்தை லால் சலாம் எனக்கு கற்றுத்தந்தது. என்ன நல்ல கதை சொன்னாலும் சூப்பர்ஸ்டார் என்கிற இமேஜ் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சச்சின் பவுலிங்கை அடித்து பறக்க விட்ட சூர்யா... கடைசில கிளீன் போல்டாக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்- வைரல் வீடியோ