43 வயது தொழிலதிபருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட போகிறேனா? விமர்சித்தவர்களுக்கு வரலட்சுமி கொடுத்த பளார் பதிலடி
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இதனை விமர்சித்தவர்களுக்கு பக்கா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர் சரத்குமாரை தொடர்ந்து அவரின் மகள் வரலட்சுமி சரத்குமார்... கடந்த 2012-ஆம் ஆண்டு, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பும், டான்ஸும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
எனவே தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் நடிக்க துவங்கிய வரலட்சுமிக்கு மீண்டும் 'தாரைதப்பட்டை' படம் மூலம் வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் பாலா தான். இந்த படம் வரலட்சுமியின் திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, எச்சரிக்கை, சண்டைக்கோழி 2, என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
மேலும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல்... வில்லியாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் இறங்கி நடித்து வரும் வரலட்சுமி... தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் தன்னுடைய நிச்சயதார்த்தம் குறித்து அறிவித்து, அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இவருடைய திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில்... மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. இதில் இருவீட்டை சேர்ந்த நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஷாலை காதலித்து, அந்த காதலில் தோல்வியை சந்தித்த வரு... இந்த முறை ஏற்கனவே திருமணம் ஆகி, 15 வயது பெண் குழந்தையின் தந்தையான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதி செய்தார். 43 வயதான, இவர் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டாவது மனைவியாக வரலட்சுமி வாக்கப்படுவது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் இதுகுறித்து அதிரடி விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
Varalakshmi Sarath kumar
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்போதுமே... கவலைப்படமாட்டேன். இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக வாழுங்கள். நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் வரப்போவது இல்லை நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்பீர்கள் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலர் தங்களின் அத்தவறை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.