"சொன்னது ஒன்னு.. நடந்தது ஒன்னு".. ஆனால் என் தப்பு தான்.. அட்லீ மீது மனவருத்தம் - சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்!
Actress Sakshi Agarwal : தமிழ் சினிமாவில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கிய நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
Actress Sakshi
ராஜா ராணி படத்தில் வரும் சாக்ஷி அகர்வாலின் அந்த கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா, தல அஜித் அவர்களுடன் நடிப்பில் வெளியான விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sakshi
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் இவர் பயணித்து வருகிறார் இருப்பினும் இவருக்கு பிரேக் கொடுக்கும் அளவிற்கான ஒரு திரைப்படம் இன்றளவும் அமையவில்லை என்றே கூறலாம். மேலும் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவான ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் தி நைட் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Agarwal
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை சாட்சி அகர்வால் தனது முதல் திரைப்பட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு நான் மாடலிங் துறையில் பயணித்து வந்த பொழுது எனக்கு ராஜா ராணி திரைப்படத்தின் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் என்னை தேர்வு செய்த அந்த காஸ்டிங் ஏஜென்சி நான் அந்த திரைப்படத்தில் இரண்டாவது நாயகி என்றும் ஆர்யா தான் நாயகன் என்றும் தெரிவித்தனர்.
நானும் அதை கேட்டு அந்த திரைப்படத்தில் நடிக்கச் சென்றேன், ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு ஷூட்டிங்கிற்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை. ஒரு கட்டத்தில் அந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து, படமும் வெளியானது. அதற்கு பிறகு தான் எனக்கு அவர்கள் சொன்னது ஒன்று, செய்தது ஒன்று என்று தெரிய வந்தது. அப்பொழுது எனக்கு தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து பெரிய அளவில் தெரியாது. உண்மையில் அட்லியிடம் நான் நேரில் சென்று பேசி என்னுடைய கதாபாத்திரம் குறித்து கலந்துரையாடாததே இதற்கு காரணம். அது நான் செய்த தவறுதான் என்று கூறியுள்ளார்.