இது போன்ற கேவலமான வேலையை இதோட நிறுத்திக்கோங்க! கல்யாண வதந்தியால் கடுப்பான சாய் பல்லவி! ஆக்ரோஷ பதிவு!
நடிகை சாய் பல்லவி, தன்னுடைய திருமண வதந்தி குறித்து வெளியான தகவலுக்கு, இப்படி கேவலமான வேலைகளை இனிமேல் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
Sai Pallavi:
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும் அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நாக சைதன்யா நடிக்கும் NC 23 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
NC 23 movie pooja:
மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளோடு, ஒரு நிஜ நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் மிக பிரமாண்டமாக போடப்பட்டது. இந்த பூஜையில் சாய் பல்லவியும் கலந்து கொண்டார். பூஜையில் முக்கிய பிரபலங்கள் அனைவருக்குமே மாலை அணிவிக்கப்பட்ட நிலையில், சாய் பல்லவி மற்றும் இயக்குனர் அருகருகே நின்றபோது எடுத்த புகைப்படத்தை சிலர் வேண்டும் என்றே... எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது படு வைரலானது.
Sai pallavi Marriage rumor:
எனவே சாய் பல்லவி இயக்குனரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்தி சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து மிகவும் ஆக்ரோஷமாக பதிவு போட்டு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுளளார் சாய் பல்லவி.
Sai pallavi photos edited:
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "நான் வதந்திகள் பற்றி பொதுவாக கவலைப்பட மாட்டேன். ஆனால் அது என் குடும்பத்தினைரை பாதிக்கும் போது, நான் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். எனது புதிய படத்தின் பூஜை நிகழ்ச்சியிலிருந்து ஒரு படத்தை வேண்டும் என்றே சிலர் திட்டமிட்டு எடிட் செய்து கேவலமான நோக்கத்தோடு வெளியிட்டு வதந்திகளை பரப்பியுள்ளனர்.
Sai Pallavi Clarified rumor:
எனது தொழில் ரீதியான மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சில வேலை இல்லாதவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள், விளக்கம் அளிக்கும் அளவுக்கு மாறியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கேவலமான வேலையை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் சாய் பல்லவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.