இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போகும் சூப்பர் சிங்கர் திவாகர்! நிறைமாத மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போட்டோஸ்!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, இன்று பல படங்களில் பின்னணி பாடகராக பாடிக்கொண்டிருக்கும் திவாகர், தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, இன்று பல படங்களில் பின்னணி பாடகராக பாடிக்கொண்டிருக்கும் திவாகர், தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஐகோனிக் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகி... பல இளம் பாடகர்கள் மற்றும் பாடகிகள் உருவாகியுள்ளனர்.
அந்த வகையில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து, ஒரு ஆட்டோ ஓட்டுநராக அறியப்பட்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மேடையை 2014-ஆம் ஆண்டு ஏறியவர் தான் திவாகர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விடாமுயற்சியுடன் வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியால் இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையில் வெளியான பஞ்சுமிட்டாய் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” படத்தில் திவாகர் பாடிய ஓபனிங் பாடலான “வாரேன், வாரேன் சீமராஜா” பாடல் சூப்பர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரசிகர்களால் கவனிக்கப்படும் பாடகராக மாறினார்.
தன்னுடைய கடின உழைப்பால் வெற்றிகரமாக பல படங்களில் பின்னணி பாடி வரும் திவாகர், கடந்த 2019 ஆம் ஆண்டு அபி என்ற பெண்ணை திருமணம்செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில், விஜய் டிவி தொலைக்காட்சியை சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர்.
அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?
திருமணமான ஒரே வருடத்தில் திவாகர் - அபி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய இறந்து போன தந்தையே குழந்தையாக பிறந்ததாக மிகவும் உருக்கமாக தன்னுடைய உணர்வுகளை அப்போது பகிர்ந்து கொண்டார் திவாகர்.
இதை தொடர்ந்து தற்போது திவாகரன் மனைவி, இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு மிகவும் எளிமையாக தற்போது, வளைகாப்பு செய்து அழகு பார்த்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.