"முதலில் அந்த நடிகர்.. அப்புறம் ஒரு தொழில் அதிபர்".. திருமணம் குறித்த சர்ச்சை - கண்ணீர்விட்ட நடிகை அஞ்சலி!
Actress Anjali About Her Marriage : குறைந்த அளவிலான படங்களில் நடித்தாலும், மக்கள் மனதில் ஆழமான இடத்தை சில நடிகைகள் பிடித்துவிடுகின்றனர். அப்படி பட்ட ஒரு நடிகை தான் அஞ்சலி.
Anjali
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான "கற்றது தமிழ்" திரைப்படத்தின் மூலம் கடந்த 2007வது ஆண்டு, தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை தான் அஞ்சலி. ஆந்திராவை சேர்ந்த அஞ்சலியின் இயற்பெயர் ரசொலே. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hnj3w3xhmz4nx0fzdmss43dp/kollywood-actress-anjali_300x406xt.jpg)
Kollywood Actress Anjali
தமிழில் இறுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான "பாவக்கதைகள்" படத்தில் நடித்திருந்த அஞ்சலி அவர்கள் அதன் பிறகு பெரிய அளவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் தான் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் "Game Changer" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதை மிக குறுகிய காலத்தில் கவர்ந்த நடிகை அஞ்சலி தனது திருமண வாழ்க்கை குறித்து தற்பொழுது ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
Actress Anjali
கடந்த 1986 ஆம் ஆண்டு பிறந்த நடிகை அஞ்சலி, 37 வயது கடந்தும் கூட இன்றளவும் திருமணம் செய்யாது தனித்து தான் பயணித்து வருகிறார். ஆனால் தான் நடிக்க துவங்கிய காலத்தில் முதலில் நடிகர் ஜெய் அவர்களோடு இணைத்து, என்னை பெரிய அளவில் காயப்படுத்தி பேசினார்கள். அதன் பிறகு ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு நான் அவரோடு ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்கள்.
இதையெல்லாம் நினைக்கும் பொழுது மனம் விட்டு அழுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கான வாழ்க்கை வரும் பொழுது திருமணம் செய்துகொள்வேன் என்று மிகவும் எமோஷனலாக அந்த பேட்டியில் பேசி உள்ளார் நடிகை அஞ்சலி.