வெள்ளத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த ரசிகர்கள்... நேரில் அழைத்து தடபுடலாக விருந்து வைத்த சூர்யா - போட்டோஸ் இதோ
வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பின் போது மக்களுக்கு உதவிய ரசிகர்களை நேரில் அழைத்து நடிகர் சூர்யா தடபுடலாக விருந்து வைத்து பாராட்டி உள்ளார்.
suriya
நடிகர் சூர்யா சினிமாவில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி ரியல் லைஃபிலும் ஹீரோவாகவே செயல்பட்டு வருகிறார். இவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயின்றி இன்று டாக்டர், இன்ஜினியர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் விதமாக சூர்யா குடும்பத்தினர் உழவன் பவுண்டேஷன் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
suriya fans
சமூக நலப்பணிகளைப் போல் ரசிகர்கள் மீதும் தீரா காதல் கொண்டிருப்பவர் சூர்யா, அவர்களின் செயல்களை கூர்ந்து கவனித்து வரும் சூர்யா, அவர்களுக்கு ஏதேனும் ஆனால் முதல் ஆளாக ஓடோடி வந்துவிடுவார். சமீபத்தில் கூட விபத்தில் சிக்கி உயிரிழந்த தன்னுடைய ரசிகர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அக்குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்துவிட்டு வந்தார்.
இதையும் படியுங்கள்... அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ
suriya fans meet
இப்படி ரசிகர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் சூர்யா, நேற்று தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு விருந்தளித்து உள்ளார். கடந்த ஆண்டு தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை வெள்ள காலகட்டத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து அவர்களை கவுரவித்து விருந்தும் கொடுத்துள்ளார். அதேபோல் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலின் போது மக்கள் பணியில் ஈடுபட்டவர்களும் இந்த நிகழ்வின் போது கெளரவிக்கப்பட்டனர்.
suriya arranged lunch for his fans
இதுதவிர அண்மையில் திருமணமான 50 ஜோடிகளுக்கும் தடபுடலாக விருந்து வைத்து அசத்தி இருக்கிறார் சூர்யா. அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து அளித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Vijay Sethupathi: 'நானும் ரவுடி தான்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த இளம் ஹீரோ யார் தெரியுமா?