"நான் அதிகமா கவலைப்படுறதே இந்த விஷயத்துக்காக தான்..” மகள் குறித்து மனம்திறந்த நடிகர் ராமராஜன்..
சமீபத்தில் ஒரு பேட்டியில் ராமராஜன் தன் மகள் அருணா சுப்ரமணியன் பற்றி மனம் திறந்து பேசினார்.
ramarajan
80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ராமராஜன். நடிகர் மட்டுமின்றி, எழுத்தாளர், இயக்குனர் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். 1998 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 12வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மண் மனம் மாறாத கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களில் நடித்த ராமராஜன் மக்கள் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். 1977 முதலே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர்.
ramarajan
தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன், ராசாவே உன்ன நம்பி, ரயிலுக்கு நேரமாச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து ராமராஜன் நடித்த கரகாட்டகாரன் படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதை தொடர்ந்து என்ன பெத்த ராசா, மனசுக்கேத்த மகராசா, அன்புக்கட்டளை, தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அவர் நடிகை நளினியை 1987 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான 13 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் ராமராஜன் தன் மகள் அருணா சுப்ரமணியன் பற்றி மனம் திறந்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “என் மகனுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். என் பேரன் என்னை தாத்தா என்று அழைப்பான். வெளிநாட்டில் செட்டில் ஆனதால், வீடியோ கால் மூலம் தான் பேசுவேன். ஆனால் எனது மகளுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அவருக்கு குழந்தை இல்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. குழந்தை பிறந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.” என்று கூறினார்.
சாமானியன் படத்தின் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்கு கம்பேக் கொடுத்துள்ளார் ராமராஜன். இப்படத்தை ஆர் ராகேஷ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த டிரெயிலரை யூடியூப்பில் 9 லட்சத்து 21 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். ராதாரவி, கே.எஸ். ரவிக்குமார், மைம் கோபி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.