நேற்று கேப்டன் நினைவிடத்தில்... இன்று வெற்றி துரைசாமி வீட்டில்! மனம் உருகி அஞ்சலி செலுத்திய நடிகர் மோகன்!
நேற்று, கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி அஞ்சலி செலுத்திய மோகன், இன்று வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
80பது மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். பெருபாலும் இவரை ரசிகர்கள் பலரும் மைக் மோகன் என அழைப்பது வழக்கம். இவர் பீக்கில் இருந்த சமயத்தில், சில விஷமிகள் கொளுத்தி போட்ட வதந்தியால் இவரின் ஒட்டு மொத்த கேரியரே பாதிக்கப்பட்டு, திரையுலகை விட்டே விலகும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.
1999-ஆம் ஆண்டு 'அன்புள்ள காதலுக்கு' என்கிற படத்தில் நடித்த பின்னர், 2008 ஆம் ஆண்டு சுட்டப்பழம் படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், தற்போது 'ஹாரா' என்கிற படத்தில் சுமார் 16 வருடங்களுக்கு பின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்திலும் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள இவர்... நேற்று கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் சென்று, சுமார் 1000-பேருக்கு அன்னதானம் வழங்கி, மனம் உருக அஞ்சலி செலுத்தினார்.
இவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். விஜயகாந்த் ஹீரோவாக நடித்த 'நூறாவது நாள்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதே போல் 'வேங்கையின் மைந்தன்' என்கிற படத்திலும் விஜயகாந்துடன் இணைத்து நடித்திருந்தார். மோகன், கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போது, கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந்தும் உடனிணருந்தார்.
இதை தொடர்ந்து இன்று, இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதியன்று கழிந்த விபத்தில்... முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் சைதை துரைசாமி அவர்களையும் சந்தித்து... ஆறுதல் கூறினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.