போதும் முடிச்சுக்கலாம்.. அநியாயத்திற்கு அநியாயம் பண்ண ரசிகர்கள் - எண்டு கார்டு போட்ட பிக் பாஸ் பிரதீப்!
Pradeep Antony : இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, அங்கு ஏற்பட்ட சில விஷயங்களால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய போட்டியாளர் தான் நடிகர் பிரதீப் ஆண்டனி.
BB Contestants
இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றால் அது மிகையல்ல. காரணம் அதிக அளவிலான போட்டியாளர்களுடன் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு மிகவும் சுவாரசியமாக நகர்ந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அர்ச்சனா தான் வெற்றி பெற்றுள்ளார் என்று பல தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வந்தாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை தான் யார் வெற்றியாளர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும்.
Kamalhaasan
இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, 34வது நாளில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரபல நடிகர் பிரதீப் ஆண்டனி. இவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிய அன்று முதல் இணையத்தில் ஆண்டனிக்கு ஆதரவாக பலரும் போர் குரல் எழுப்ப தொடங்கினர்.
Archana
குறிப்பாக கமலஹாசனுக்கு எதிராகவே மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல பிரதீப் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரை ஆதரித்து பல இணையவாசிகளும் அவருக்கு ஆதரவாகவும், மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு எதிராகவும் வீடியோக்களையும், மீம்களையும் கடந்த இரண்டு மாதங்களாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Pradeep Antony
இந்நிலையில் நாளையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் முடிவடையுள்ள நிலையில், தற்போது பிரபல நடிகர் பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பிரதீப் ஆண்டனி வெளியிட்ட அந்த பதிவில் "எனக்காக அழுது, போறவரவன்கிட்ட எல்லாம் சண்டை போட்டு, இன்றளவும் வீடியோஸ் எல்லாம் போட்டு ட்ரெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற என் அன்பு உள்ளங்களே மிகவும் நன்றி".
"ஆனால் நான் சோகமா எல்லாம் இல்ல, நீங்களும் சோகமா இருக்காதீங்க, ஜாலி பண்ணலாம். வன்மம் போதும் முடிச்சுக்கலாம். அநியாயத்துக்கு அநியாயம் பண்றீங்க" என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய போகும் தருணத்தில் இனியும் எந்த வன்மமும் வேண்டாம் யாரையும் குறை கூற வேண்டாம் நாம் ஜாலியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் பிரதீப் ஆண்டனி.