வெள்ளத்தில் சிக்கிய விஷ்ணு விஷால் - அமீர் கான்! ஓடி வந்து உதவிய அஜித்! புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி பதிவு!
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் வெள்ளத்தில் சிக்கிய நிலையில்... இதுகுறித்து அறிந்து முதல் ஆளாக ஓடி வந்து நடிகர் அஜித் உதவியுள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
vishnu vishal
பலத்த காற்றின் காரணமாக, சென்னையில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில், கான்கிரீட் வீடுகள், மற்றும் அப்பார்ட்மென்ட் வீடுகளிலும் தண்ணீர் உள்ளே புகுந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பலர் சிக்கி உள்ளனர்.
vishnu vishal
குழந்தைகள், மற்றும் வயதான வர்களுக்கு மருந்து, மாத்திரைகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முடிந்தவரை அரசு தரப்பில் இருந்து பாதிப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர்.
இந்த வெள்ளத்தால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நடிகர் விஷால் காரப்பாக்கம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துவிட்டதாகவும் ... யாரும் தங்களை மீட்க வரவில்லை என தெரிவித்திருந்தார். இவர் இந்த பதிவை போட்ட சில மணி நேரங்களில்... காரப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் தமிழக தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதே பகுதியில் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக தங்கி இருந்த பாலிவுட் அமீர் காணும் விஷ்ணு விஷாலுடன் போட் மூலம் வெளியேறினார். இந்த விஷயம் குறித்து அறிந்து நடிகர் அஜித் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கானை. சந்தித்துள்ளார். மேலும் கமிட்டி மெம்பர்ஸ் வில்லாவிற்கு அவர்கள் செல்ல.. அஜித் கார் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு விஷால் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D