மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஆமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் குடும்பம்! பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
நடிகர் விஷ்ணு விஷால் காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளதாக விஷ்ணு விஷால் இன்று புகைப்படத்துடன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
vishnu vishal
சென்னையில் கோர தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால், சென்னையை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்ச்சியது. பல அபார்ட்மெண்டில் கூட, தரை தளம் முழுக்க தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் பலர் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட திண்டாடும் நிலையில் உள்ளனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgwg7m4n3cc1sqzex7ykbvwj/gakpphywiaanwbk_300x225xt.jpg)
vishnu vishal
இது ஒருபுறம் இருந்தாலும், உதவி தேவைப்படுபவர்கள்... சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கூறி வருகிறார்கள். அரசு சார்பிலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முழுவதும் மழை விடாமல் பெய்து வந்தாலும், இன்று காலை முதல்... சென்னையில் மழை குறைந்துள்ளது. எனவே தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணிகள் முடக்கிவிட பட்டுள்ளது.
vishnu vishal
இந்த நிலையில், இன்று காலை நடிகர் விஷ்ணு விஷாலும் தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதாகவும், தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனக்கூறி எக்ஸ் தளத்தில் தன் ஆதங்கத்தை கொட்டி இருந்தார். அந்த பதிவில்.. அந்த பதிவில், "காரப்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. உதவி கேட்டு அழைத்திருக்கிறேன். இங்கு கரண்ட் இல்ல, வைஃபை இல்ல, போன் சிக்னல் இல்ல, எதுவுமே இல்ல. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக தீயணைப்பு துறையினர்... காரப்பாக்கம் பகுதியில் சிக்கிய மக்களை மீட்கும் அணியில் உடனடியாக இறங்கினர். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரின் குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டதுடன், தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக... சென்னையில் கடந்த இரண்டு மாதமாக காரப்பாக்கம் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நடிகர் அமீர் கானையும், வெள்ளத்தில் இருந்து பத்திரமாக போட் மூலம் மீட்டுள்ளனர்.
வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் விஷ்ணு விஷால்... மற்றும் அமீர் கான் இருவரும், தமிழக தீயணைப்பு துறையினருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D