5 வயது சிறுமியிடம் 60 வயது கிழவன் செய்த வேலையை பார்த்தீங்களா? வசமாக சிக்கியதால் விபரீத முடிவு..!
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வசமாக சிக்கிக்கொண்ட 60 வயது முதியவர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது(60). அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர், தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
விளையாடிக்கொண்டிருந்த மகளை காணவில்லை என்று அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது 60 வயது முதியவர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதை பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து முதியவர் அங்கிருந்து தப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடிவந்தனர். பயத்தில் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.