69 வயதிலும்... மனைவி ராதிகா மீது குறையாத காதல் ! 23 ஆம் ஆண்டு திருமண நாளில் சரத்குமார் கொடுத்த சர்பிரைஸ்!
நேற்று நடிகை ராதிகா - சரத்குமார் ஜோடி தங்களின் 23-ஆவது திருமண நாளை கொண்டாடும் நிலையில்... மனைவி ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுள்ளார் சரத். இதுகுறித்து ராதிகா தன்னுடைய சமூக வலைதளப்பாக்கத்தில் காதலோடு அறிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில், 60 வயதை கடந்தும்... குறையாத காதலுடன் கியூட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா - சரத்குமார் இருவரும் நேற்று தங்களின் 23-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hnwe7rhapmmjc7156ne4mepy/radhika--5-_300x375xt.jpg)
சரத்குமார் ஏற்கனவே சாயா என்பவரை காதலித்து கரம் பிடித்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். சாயா மூலம் சரத்குமாருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை முறை திருமணம் ஆகி விவாகரத்தில் முடிந்தது. முதல் கணவர் பிரதாப் போத்தனுடன் ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்த ராதிகா, பின்னர் ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் மட்டுமே இந்த வாழ்க்கை தொடர்ந்தாலும்.. இவர் மூலம் ராதிகா ரேயான் என்கிற தன்னுடைய மகளை பெத்தெடுத்தார்.
ரேயான் பிறந்த பின்னர்... முழுக்க முழுக்க அவருக்காகவே வாழ துவங்கினார். மகளை ஒரு சிங்கிள் மதராக வளர்த்து கொண்டே, அம்மாவின் உதவியுடன் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து, ராதிகா - சரத்குமார் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே இருந்த ஆழமான நட்பு... பின்னர் காதலாக மாறியதால், எளிமையான முறையில் 2001-ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் வீட்டிலேயே நடந்தது.
திருமணத்திற்கு பின்னர், ராதிகா - சரத்குமார் ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் பிரிந்தார். தற்போது ராகுல் அமெரிக்காவில் சினிமா சம்மந்தமான படிப்பை படித்து வருகிறார். திருமணம் ஆனதில் இருந்து... இணை பிரியாத காதல் ஜோடிகள் போல், கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் நேற்று தங்களின் 23-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
இதனை மிகவும் எளிமையாக இருவருமே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் தன்னுடைய மனைவி ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில்... ராதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சர்பிரைஸ் கொடுத்துள்ளார் சரத்.
radhika
தற்போது இவர் நடித்து வரும் படப்பிடிப்பு புதுவையில் நடந்து வரும் நிலையில்... சரத்குமார் பாண்டிக்கு நேரடியாக சுமேரு தன்னுடைய மனைவிக்கு வாழ்த்து கூறி அன்பு பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்த அழகிய தருணத்தை காதலோடு கணவரை கட்டிபிடித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோசை வெளியிட்டு ராதிகா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ராதிகா மற்றும் சரத்குமார் ஜோடிக்கு ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.