43 வயதிலும் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போட்ட ‘வாளமீனு’ மாளவிகா... வைரலாகும் புகைப்படங்கள்
குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா, நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன உன்னைத் தேடி என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இவர் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம் போன்ற படங்களில் நடித்த மாளவிகாவை பிரபலமாக்கியது ‘கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு’ என்கிற பாடல் தான். சேரன் இயக்கிய வெற்றிகொடிகட்டு படத்தில் இடம்பெறும் இப்பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் மாளவிகா.
இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடிக்கத் தொடங்கிய நடிகை மாளவிகா, படிப்படியாக கிளாமர் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். குறிப்பாக மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாளமீனுக்கும் விளாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற கானா பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் மாளவிகா.
இதையும் படியுங்கள்... பேஷன் ஷோவுக்கு தங்க நெக்லஸ் போட்டுட்டு வந்தது குத்தமா? நடிகை டாப்ஸியை ரவுண்டு கட்டி விளாசும் நெட்டிசன்கள்
இதையடுத்து திருட்டுபயலே, நான் அவன் இல்லை போன்ற வெற்றிப்படங்களில் நடித்த நடிகை மாளவிகா, கடந்த 2007-ம் ஆண்டு சுமேஷ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. திருமணத்துக்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த மாளவிகா, தற்போது ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் கோல்மால் என்கிற காமெடி திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, அதில் தனது புகைப்படங்களையும் அவ்வபோது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா, அப்போது நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையணிந்து குளித்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 43 வயதிலும் இம்புட்டு கவர்ச்சியா என ஷாக் ஆகிப்போய் உள்ளனர். மாளவிகாவின் இந்த பிகினி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்...
எத்தனை மிமிக்ரி ஆர்டிஸ்ட் வந்தாலும், நீதான் நம்பர் 1 - கோவை குணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மதுரை முத்து