Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சியில் ஒன்று கூடிய ஹோமோ செக்ஸ் வெறியர்கள்!!! டேய் ஊரு பேர கெடுக்காதிங்கடா....

பொள்ளாச்சியில் ரிசார்ட் ஒன்றில் ரகசியமாக கூடி தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் சரக்கு விருந்து நடத்திய 150 பேரை கூண்டோடு தூக்கியது போலீஸ், இவர்களில் ஹோமோ செக்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Homo sex pare joined at pollachi resort
Author
Pollachi, First Published May 4, 2019, 2:32 PM IST

பொள்ளாச்சியில் ரிசார்ட் ஒன்றில் ரகசியமாக கூடி தடை செய்யப்பட்ட போதை மாத்திரையுடன் சரக்கு விருந்து நடத்திய 150 பேரை கூண்டோடு தூக்கியது போலீஸ், இவர்களில் ஹோமோ செக்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலியல் கொடூரம் நடந்த பொள்ளாச்சியில் மீண்டும் இப்படியான ஒரு கேவலமான சம்பவம் அதே பகுதியில் அரங்கேறியுள்ளது. கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட 159 கேரள மாணவர்களை கோவை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளது.

கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வரும்  கேரள மாணவர்கள் டேட்டிங் ஆப் மற்றும் டேட்டிங்  வெப்சைட் மூலமாக பொள்ளாச்சியில் ஒரு மது விருந்துக்கு ஏற்பாடு செய்தும், குறிப்பாக ஹோமோ செக்சில் ஆர்வம் மிக்க இளைஞர்களில் ஏற்பாட்டில் பொள்ளாச்சி சேத்துமடையில் உள்ள அக்ரி நெஸ்ட் என்ற ரிசார்ட்டை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்நிலையில், பிளான் போட்டபடி நேற்று இரவு 10 மணிக்கு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள சொகுசு கார்கள், விலை உயர்ந்த பைக்குகளில் வந்த சுமார் 160 பேர் தடை செய்யப்பட்ட  போதை மாத்திரை பல்வேறு விதமான சரக்கு வகைகளை  அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.  

இதனைத் தொடர்ந்து புகாரை அடுத்து கோவை எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான போலீசார் அந்த ரிசார்ட் தோட்டத்தில் உள்ளே நுழைந்தும், ஒரு டீம் தோட்டத்தை சுற்றி வளைத்தும் இருந்தது. அப்போது கஞ்சா,சரக்கு என விடிய விடிய மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தியதை அடுத்து159 மாணவர்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் ஹோமோ செக்சில்  ஆர்வம் மிக்க இளைஞர்கள் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios