Asianet News TamilAsianet News Tamil

வேலை வாங்கி தர்றேனு கூட்டிட்டுபோய் ஓட்டலில் வச்சி என்னை நாசம் பண்ணிட்டான் அக்கா.. குலுங்கி குலுங்கி அழுத தங்கை

வேலை வாங்கி தருவதாக அழைத்து  சென்று இளம் பெண்ணை  இளைஞர் ஒருவர் ஹோட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

A young woman was raped in Noida on the promise of getting her a job
Author
Noida, First Published Aug 5, 2022, 6:26 PM IST

வேலை வாங்கி தருவதாக அழைத்து  சென்று இளம் பெண்ணை  இளைஞர் ஒருவர் ஹோட்டல் அறையில் வைத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லி எல்லையையொட்டி உள்ள உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது  முதியவர் வரை பாலியல் சீண்டலுக்கு அளாகி வருகின்றனர். காதலிப்பதாக கூறி கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசீட் வீசுவது, காதலித்து திருமணம் செய்து பின் வர தட்சணைகேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமையாகள் பெண்கள் அனுபவித்து வருகின்றனர் இந்த வரிசையில் இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடத்தி இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கற்பழித்துள்ள சம்பவம் நடந்துள்ளது .

A young woman was raped in Noida on the promise of getting her a job

இதையும் படியுங்கள்: கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை மிரட்டி உல்லாசம்.. கயவாளித்தனம் செய்த போலீசை கொத்துக்கறி போட்டு புருஷன்.

முழு விபரம் பின்வருமாறு:-  நொய்டாவில் செக்டார் 27-ல் இளம்பெண் ஒருவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார், அப்போது அதை அறிந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணை அனுகி அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அந்த பெண்ணிடம் தான் படித்தவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறினார். இதைக்கேட்ட அந்த பெண்ணுக்கு அந்த இளைஞன் மீது நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் செக்டர் 27ல் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிடுமாறு ஒரு இடத்தை தேர்வு செய்தார். அதை நம்பி அந்தப் பெண் அங்கு வந்தார். அப்போது அங்கு அந்த பெண்ணுக்காக காத்திருந்த அந்த இளைஞன்,

இதையும் படியுங்கள்: காதலன் உடன் கண்றாவி கோலத்தில் மனைவி... கையும் களவுமாக பிடித்த கணவன்... கல்லால் அடித்து கொலை.

அந்த பெண்ணை அருகில் உள்ள ஓட்டலில் தேநீர் அருந்த அழைத்துச்சென்றார், பின்னர் அந்தப் பெண்ணை ஹோட்டல் அறையில் தள்ளி அந்த பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தார், அதில் திகைத்துப் போன அந்த பெண், அங்கிருந்து தப்பிக்க எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை, பின்னர் அங்கிருந்து தப்பி வந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது சகோதரியடம் கூறினார். பின்னர் இருவரும் சேர்ந்து செக்டார் 20 காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர்.

A young woman was raped in Noida on the promise of getting her a job

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், அந்தப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணை ஏமாற்றி கற்பழித்த அந்த இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சாகர் அல்ல ஷாபாஷ் என்பது தெரியவந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios