சுஷாந்த் என்னிடம் கடைசியாக பேசியது இதுதான்... மீள முடியாத சோகத்தில் இருக்கும் தந்தையின் உருக்கமான பதிவு...!
தற்போது சுஷாந்தின் தந்தை மகன் தன்னுடன் பேசிய கடைசி வார்த்தை குறித்து மனம் திறதுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
பாலிவுட்டில் நல்ல நிலைக்கு வளர்ந்து வந்த சுஷாந்த் திடீரென தற்கொலை செய்து கொண்டதை அவருடைய ரசிகர்களால் இதுவரை ஜீரணிக்கமுடியவில்லை. இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் ரசிகர்களை கொதிப்படையச் செய்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!
இந்நிலையில் கடந்த 18ம் தேதி மீளமுடியாத துயரத்துடன் சுஷாந்தின் குடும்பத்தினர் அவருடைய அஸ்தியை பாட்னாவில் உள்ள கங்கை ஆற்றில் கரைத்தனர். அக்காக்களின் செல்ல தம்பியாகவும், அப்பாவின் ஆசை மகனாகவும் வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் இன்று நம்முடன் இல்லை என்பதை அவருடைய குடும்பத்தால் ஏற்க முடியவில்லை. கனத்த இதயத்துடன் சுஷாந்தின் அஸ்தியை அவருடைய தந்தை கங்கை ஆற்றில் கரைக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேதனையுடன் பகிரப்பட்டது.
இதையும் படிங்க: பிரவசத்திற்கு பின் ராதிகா மகளிடம் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... கடைசி போட்டோவை பார்த்தால் நீங்களே அசந்துபோவீங்க!
தற்போது சுஷாந்தின் தந்தை மகன் தன்னுடன் பேசிய கடைசி வார்த்தை குறித்து மனம் திறதுள்ளார். இதில் 'நான் சுஷாந்திடம் உனக்கு பிடித்த ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள் என்றேன். அவன் கொரோனா சமயத்தில் வேண்டாம், பிப்ரவரி மாதம் பார்த்துக்கொள்ளலாம் என்றான். அதோடு சுஷாந்த் அங்கிதாவை காதலித்தது தான் தெரியும், அதன் பிறகு அவர் யாரை காதலித்தார் என்று எங்களுக்கு தெரியாது, அவர் எப்போதும் வெளிப்படையாக பேசுவான். ஆனால், கடந்த சில மாதங்களாக அப்படி இல்லை என தாங்க முடியாத துக்கத்துடன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.