Asianet News TamilAsianet News Tamil

ஐஸ்வர்யாவின் அராஜகத்திற்கு எதிராக போராடும் போட்டியாளர்கள்; சர்வாதிகாரியை அடக்கிய பொன்னம்பலம்;

big boss contestants protest against aiswarya
big boss contestants protest against aiswarya
Author
First Published Aug 2, 2018, 1:57 PM IST


பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யாவை நியமித்திருக்கிறார் .பிக் பாஸ் அதிகாரம் கையில் கிடைத்தது முதல் ஐஸ்வர்யாவின் அராஜகமும் கொடிகட்டி பறக்க துவங்கி விட்டது. பாலாஜியின் தலையில் குப்பையை கொட்டுவது, சென்றாயனிடம் டீ குடிக்கவிடாமல் தகராறு செய்வது, மரியாதை இல்லாமல் தகாத வார்த்தைகளில் பிறரை திட்டுவது, என அத்துமீறி வருகிறார் ஐஸ்வர்யா.

big boss contestants protest against aiswarya

இதை எல்லாம் பார்த்து பார்த்து அவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் சக போட்டியாளர்கள். இதில் நேற்று சில போட்டியாளர்களை தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என கூறி, ஜெயிலில் வேறு அடைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

அவரின் இந்த அராஜகத்தை எதிர்த்து பிக் பாஸ் சிறையில் இருந்தபடி போராடி இருக்கின்றனர் சக போட்டியாளர்கள். அதிலும் மஹத் மற்றும் யாஷிகா போன்றோர் சிறை கதவை திறக்க சொல்லி வெறித்தனமாக போராடி வருகின்றனர்.

 

😈😈😈 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/PwA0zcj58i

— Vijay Television (@vijaytelevision) August 2, 2018

இதனால் கதவை திறக்க பொன்னம்பலம் மற்றும் சென்றாயன் முயற்சி செய்கின்றனர். இதை தடுக்க வந்த சர்வாதிகாரி ஐஸ்வர்யாவை சென்றாயன் மற்றும் பொன்னம்பலம் சேந்து தண்ணீரில் தள்ளி இருக்கின்றனர். தற்போது வெளியாகிய பிரமோவில் தான் இந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றனர். அடக்குமுறையை எதிர்த்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் இந்த போராட்டத்திற்கு, பிக் பாஸ் என்ன தீர்ப்பு தர போகிறார் என இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியும்

Follow Us:
Download App:
  • android
  • ios