மத்திய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022, கடலோர மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கிறது, மேலும் சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

05:58 PM (IST) Sep 22
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. “Coordinated design and tuning of controllers for on board/off board power electronic interfaces” என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
04:54 PM (IST) Sep 22
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் படிக்க
04:12 PM (IST) Sep 22
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும். தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் படிக்க
03:26 PM (IST) Sep 22
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் படிக்க
03:13 PM (IST) Sep 22
புரட்டாசி மாத அமாவாசையொட்டி சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல செப்.23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
03:06 PM (IST) Sep 22
அவருக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் அனைத்தையும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் : சுகாதாரத்துறை அமைச்சர்
02:22 PM (IST) Sep 22
தமிழகத்தில் இன்று நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
01:56 PM (IST) Sep 22
SBI வங்கியானது காலியாக உள்ள 1,673 ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்மேலும் படிக்க
01:35 PM (IST) Sep 22
காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்ட நிலையில் தற்பொழுது 8 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
01:04 PM (IST) Sep 22
மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் கேப்டன் படத்தின் மினியேச்சரும் பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டுள்ளது.
தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்
01:03 PM (IST) Sep 22
மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் கேப்டன் படத்தின் மினியேச்சரும் பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டுள்ளது.
தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்
01:01 PM (IST) Sep 22
சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (70). வீட்டு வேலை செய்து வந்தார். இவரது மகள் அமுதா, செங்குன்றம் அடுத்த காந்திநகர் நேரு தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
01:01 PM (IST) Sep 22
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய அழகு நிலைய ஊழியரை காதலர்களை வைத்து கொலை செய்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் உடலை 12 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடத்தில் வீசப்பட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12:59 PM (IST) Sep 22
தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் படிக்க
12:49 PM (IST) Sep 22
ஆ. ராசா விவகாரத்தில் வாய்மொழி மௌனியாக ஸ்டாலின் ஏன் இருந்து வருகிறார். 2 ஜீ ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழலில் பெரும்பகுதியை ஸ்டாலினுக்கு ஆ.ராசா கொடுத்திருப்பாரோ என்கின்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
12:24 PM (IST) Sep 22
சூரி சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விபத்திற்கு உள்ளாகியுள்ளார் இருந்தும் சற்றும் அசராத சூரி மருத்துவமனைக்கு சென்று திரும்பிய உடனேயே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
என்ன மனுசன்யா இவரு...முதல் படத்திற்காக உயிரை பணையம் வைத்த சூரி.. பிரமித்துப்போன ஸ்டண்ட் மாஸ்டர்...
12:01 PM (IST) Sep 22
தஞ்சாவூர் மாவட்டம் முத்தம்மாள்புரம் கிராமத்தில் காசி விஸ்வநாதசாமி கோவில் உள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலசம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தி சாமி சிலை கொள்ள அடிக்கப்பட்டது. மேலும் படிக்க
11:36 AM (IST) Sep 22
பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
11:05 AM (IST) Sep 22
மாற்றுப் பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இல்லம் தேடிக்கல்வி, திட்ட கட்டகங்கள் தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்க
10:43 AM (IST) Sep 22
மன்னர்கள் சார்ந்த கதைகளத்தை சூர்யாவும் கையில் எடுத்திருப்பது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் அழ்த்தியுள்ளது.
10:23 AM (IST) Sep 22
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவித்து சென்னையில் போஸ்டரை ஒட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க...
10:20 AM (IST) Sep 22
பட்டப்பகலில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளரை அரிவாளால் சரமாரியாக வெட்டுவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
10:02 AM (IST) Sep 22
இரண்டாம் படத்தில் கேங்ஸ்டர் ஆக வரும் நாயகனின் ஆக்சன் மற்றும் மாஸ் காட்சிகள் அதிகமாகவே இருக்கும் என கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் சிம்பு.
வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் குறித்து உண்மையை போட்டு உடைத்த சிம்பு...குஷியில் ரசிகர்கள்
09:43 AM (IST) Sep 22
கோவை மாவட்டத்தில், ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ஆம் தேதி, அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
09:24 AM (IST) Sep 22
சமுத்திரகனி தற்போது அஜித்தின் 61வது படமான துணிவு பட போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளார். அதில் துணிவு வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்
துணிவு...வெல்வோம் சமுத்திரக்கனி போட்ட ட்விட்டால் உடைந்த அஜித் பட உண்மை
09:22 AM (IST) Sep 22
பீஸ்ட், சணிக்காகிதம் உள்ளட்ட படங்களின் மூலமா செல்வராகவன் நடிகரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரக்டருடன் பக்காவாக பொருந்தி மிரள வைக்கும் செல்வராகவன்.. நானே வருவேனில் என்ன ரோல் தெரியுமா?
09:08 AM (IST) Sep 22
அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டத்திற்கும் நிதியமைச்சராக இருந்து ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்ட உங்கள் விட்டிற்கு ஏன் சோதனை நடத்த வரவில்லை, இப்போது மட்டும் அரசு அவர்களின் கடமையை செய்ய தயங்குவது ஏன்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
08:37 AM (IST) Sep 22
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்புடைய தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட13 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
08:08 AM (IST) Sep 22
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
07:58 AM (IST) Sep 22
இதனால் பொங்கலுக்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுமோ என்கிற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
திடீரென வாரிசு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் என்ன காரணம் தெரியுமா ?
07:46 AM (IST) Sep 22
தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வைரலானது அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
07:36 AM (IST) Sep 22
Sukran Peyarchi 2022 Palangal: சுக்கிரனின் சஞ்சாரத்தால், இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம், புகழ், மகிழ்ச்சி போன்றவை நிறைந்ததாக இருக்கும். அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க
07:35 AM (IST) Sep 22
அதிமுகவின் 11.7.2022 அன்று இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களை, குறிப்பாக பொதுச் செயலாளர் பதவி, இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.