கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03-11-2022) கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தின் அறிவித்துள்ளது. இதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

10:32 PM (IST) Nov 02
கஷாயத்தில் விஷம் கலந்து இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
10:01 PM (IST) Nov 02
பிரபல ரவுடியும், பாஜக பிரமுகரான உடையார் என்பவர் பிறந்த நாளின் போது வாளால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
08:49 PM (IST) Nov 02
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
08:16 PM (IST) Nov 02
இந்தோனேசியாவின் உள்ள மஜலெங்காவைச் சேர்ந்த 61 வயது முதியவர் 88வது திருமணத்தை செய்ய உள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
07:34 PM (IST) Nov 02
கடந்த அதிமுக ஆட்சியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
06:52 PM (IST) Nov 02
சென்னையில் கனமழை பெய்து வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
06:21 PM (IST) Nov 02
மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.மேலும் படிக்க
06:21 PM (IST) Nov 02
நெல்லை பாளையங்கோட்டை அருகே மாடியில் துணி காய போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
05:51 PM (IST) Nov 02
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் இன்னும் அதே உயிர்ப்புடன் நிற்கிறது. இவற்றுள் சில பாலங்கள் 120 ஆண்டுகளுக்கும் மேலானவை. அத்தகைய ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட டாப் 5 பாலங்களை இங்கு பார்க்கலாம்.
05:26 PM (IST) Nov 02
கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை
03:43 PM (IST) Nov 02
தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 350 கி.மீ தொலைவில் அமைந்து ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் பாஹடி கோர்வா என்று பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத வகையில் 200 வகையான பாம்புகள் காணபடுவதால், இந்த பகுதியை பாம்புகளின் இருப்பிடம் என்று அழைக்கின்றனர்.மேலும் படிக்க
03:31 PM (IST) Nov 02
குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணத்தை அரசு வழக்கறிஞர் குஜராத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
02:59 PM (IST) Nov 02
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மேலும் படிக்க
02:46 PM (IST) Nov 02
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கார்த்தி தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். மேலும் படிக்க...
02:29 PM (IST) Nov 02
இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். அப்போது அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
01:59 PM (IST) Nov 02
மீராமிதுன் பேயாக நடித்துள்ள, 'பேய காணோம்' திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ள... இந்த படத்தின் டிக்கெட்டில் தள்ளுபடி வழங்க அதிரடி முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். மேலும் படிக்க...
01:34 PM (IST) Nov 02
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என அண்ணாமலை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
01:26 PM (IST) Nov 02
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர், நாகூர் தர்கா தலைவர் ஆகியோரிடம் வழங்கினார்.மேலும் படிக்க
12:13 PM (IST) Nov 02
சென்னை டூ அந்தமான் செல்லக்கூடிய 14 விமானங்கள் வரும் 4 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் விமான நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்லது. மேலும் அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 7 விமானங்கள் மற்றும் அந்தமானிலிருந்து சென்னை வரும்7 விமானங்கள் என 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
12:12 PM (IST) Nov 02
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுமக்களில் ஒருவரைப் பார்த்து "போடா மயிறு" என தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
12:09 PM (IST) Nov 02
ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் - வசந்தா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் வசந்தா இரண்டாவது முறை கரப்பமடைந்துள்ளார். அவருக்கு கடந்த 20-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேலும் படிக்க
11:54 AM (IST) Nov 02
ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்தப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திமுக அரசு திட்டமிடுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
11:26 AM (IST) Nov 02
இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மிக கனமழை பெய்த நிலையில் 5 நாட்களுக்கு கனமழையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
10:55 AM (IST) Nov 02
கோவை கார் வெடி விபத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் திருச்சியில் நடைபெற்ற சோதனையில் செல்போனை ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
10:40 AM (IST) Nov 02
கிபி 985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜசோழனுக்கு முடிசூட்டப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் சதய விழா கொண்டாடப்படுகிறது.1037வது சதய விழாவை முன்னிட்டு, பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க
10:28 AM (IST) Nov 02
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கன் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் இன்று 100 கடி அடி நீரை திறக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
09:40 AM (IST) Nov 02
தமிழகத்தில் மத துவேஷத்தை பரப்பி, சாதிய வேற்றுமைகளை உருவாக்கி பதட்டத்தை உருவாக்கி வரும் வி சி க தலைவர் தொல். திருமாவளவனைகைது செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க..
08:40 AM (IST) Nov 02
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ள நீர் காரணமாக சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
08:35 AM (IST) Nov 02
சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் பகுதியில், சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
08:28 AM (IST) Nov 02
தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்டுகிறது. தமிழ்நாட்டில் பாஜக வால் ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம். இதை மற்ற காட்சிகள் செய்கிறதோ இல்லையோ விசிக கண்டிப்பாக செய்யும் என திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.
08:02 AM (IST) Nov 02
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
07:29 AM (IST) Nov 02
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.
07:28 AM (IST) Nov 02
கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.