Asianet News TamilAsianet News Tamil

விடியலை நோக்கி ஆட்சி எனக் கூறிய திமுக..! ஒரு குடும்பத்திற்கு மட்டுமே விடியல் செல்கிறது - ஓபிஎஸ் ஆவேசம்

ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்தப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க திமுக அரசு திட்டமிடுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 

OPS condemns DMK for giving contract employees jobs to private parties
Author
First Published Nov 2, 2022, 11:50 AM IST

போலி வாக்குறுதி கொடுத்த திமுக

ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு கொடுக்க இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்"; "அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்";

"புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என போலி வாக்குறுதிகளை அளித்து அதன்மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிகமாகவும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை வேலையிலிருந்து எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் சதா சர்வகாலமும் சிந்தித்து வருகிறதேயொழிய புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ அல்லது காலிப் பணியிடங்களை நிரப்புவதிலோ கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக அனைத்தையும் தனியார்மயமாக்க தி.மு.க. அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பாஜக வால் ஆட்டினால்! ஒட்ட நறுக்குவோம்! மத்தவங்க செய்றாங்களோ இல்லையோ நாங்க செய்வோம்!திமிரும் திருமா

ஈரோட்டில் ஊழியர்கள் போராட்டம்

சில மாதங்களுக்கு முன்பு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் மூலம் சம்பளம் பெற்று வந்த ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்த தி.மு.க. அரசு, தற்போது ஈரோடு மாநகராட்சியின் பணிகளையும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான துப்புரவு மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும்,

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஈரோடு மாநகராட்சிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பணிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்..! குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கும் திமுக கூட்டணி எம்பிக்கள்

 திமுகவிற்கு ஆதாயமா..?

மக்களின் வாக்குகளைப் பெற்ற தி.மு.க., வாக்குறுதிக்கு முற்றிலும் முரணான வகையில், அரசுத் துறைகளிலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாட்டைக் கண்டு, அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன்மூலம் தி.மு.க.வினருக்கு ஆதாயம் ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும், தி.மு.க. அரசின் இந்த தொழிலாளர் விரோதச் செயல்பாட்டைக் கண்டு, தங்களுக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் உறைந்து போயிருக்கிறார்கள். வாக்குறுதிக்கு எதிர் மாறாக நடந்து கொண்டுவிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதும், அதைச் சாதனை என்று கூறிக் கொள்வதும் வெட்கக்கேடானது, கேலிக்கூத்தானது, நகைப்புக்குரியது. இது சாதனை அல்ல, மக்கள்படும் வேதனை. சோதனைக்கு மேல் சோதனைகளை மக்கள் தி.மு.க. ட்சியில் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடியலை நோக்கி..?

'விடியலை நோக்கி' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று ஒரு குடும்பத்தின் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் செயல்பாட்டைப் பார்க்கும்போது 'எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே' என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள்தான் மக்களின் நினைவிற்கு வருகின்றன.

எனவே, அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி, ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அனைத்துத் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதோடு, மக்கள் தி.மு.க.வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

திருமாவளவனை கைது செய்ய வேண்டும்..! மதம், சாதி மோதல் ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பு- பாஜக

Follow Us:
Download App:
  • android
  • ios