ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூத்தாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10:10 PM (IST) Apr 27
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை டெல்லி செல்வார் என்று தகவல்.
06:55 PM (IST) Apr 27
மார்க் ஆண்டனி படத்தின் அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இப்படம் ஒரு டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பேண்டஸி திரைப்படம் என தெரிகிறது. போன் மூலம் டைம் டிராவலா என்கிற வசனமும் படத்தில் இடம்பெற்று உள்ளது. மேலும் படிக்க
06:18 PM (IST) Apr 27
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் முன்பதிவு வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
03:27 PM (IST) Apr 27
சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பார்த்திபன் ஐடி ரெய்டு பற்றி பேசி உள்ளார். மேலும் படிக்க
02:44 PM (IST) Apr 27
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் டுவிஸ்ட் ஆக இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். மேலும் படிக்க
01:56 PM (IST) Apr 27
நடிகை குஷ்பு தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய் மரணமடைந்ததை அடுத்து, அந்த நாயின் புகைப்படங்களை பதிவிட்டு எமோஷனல் டுவிட் ஒன்றையும் போட்டுள்ளார். மேலும் படிக்க
01:49 PM (IST) Apr 27
நீலநிற போர்டில் வெள்ளை அம்புக்குறி உள்ள சாலையில், வாகனங்களை நிறுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
01:34 PM (IST) Apr 27
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
01:34 PM (IST) Apr 27
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என பள்ளிக்கல்வி துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
01:10 PM (IST) Apr 27
நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள அவரது தீவிர ரசிகர், அந்தக் கோவிலை சமந்தாவின் பிறந்தநாளன்று திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் படிக்க
12:43 PM (IST) Apr 27
நாட்டில் மேலும் 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
12:01 PM (IST) Apr 27
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு காவல்துறையினர் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11:50 AM (IST) Apr 27
நடிகர் விஷாலும், மார்க் ஆண்டனி படக்குழுவினரும் நடிகர் விஜய்யை அவரது புதிய அலுவலகத்தில் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
11:05 AM (IST) Apr 27
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்த முடியும் என இலங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
11:04 AM (IST) Apr 27
கர்நாடகாவில் யார் அடுத்த முதலமைச்சர் என்பதை நாய் ஒன்று கணித்துள்ளது.
10:52 AM (IST) Apr 27
லியோ படத்துக்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் படிக்க
10:32 AM (IST) Apr 27
சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
09:05 AM (IST) Apr 27
பட்டப்பகலில் நடுரோட்டில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
08:04 AM (IST) Apr 27
ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற இருப்பதால், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் GP ரோடு சந்திப்பு வரை அடுத்த 4 ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 3.30 மணி முதல் 9.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
07:36 AM (IST) Apr 27
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை காப்பாற்ற 8 மணி நேரம் டூ 12 மணி நேரம் வேலை நேர நாடக அரசியலை திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் அரங்கேற்றியதாக எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.
06:55 AM (IST) Apr 27
ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அபினவ் பிந்த்ரா இன்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
06:51 AM (IST) Apr 27
முறப்பநாடு காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் அப்பட்டமான அலட்சியத்தையே காட்டுகிறது. யாரும் முன்வராத சமயத்தில் இந்த வி.ஏ.ஓ. புகார் கொடுத்திருக்கிறார் என்பது காவல்துறை தவிர வேறு யார் மூலமாகவும் கொலையாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.