எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த நிலையில், சந்திப்பு ரத்தானதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:12 PM (IST) Apr 08
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது சென்னை அணி.
10:46 PM (IST) Apr 08
“எங்கள் முதல்வர், எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியினை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இன்று பார்வையிட்டார்.
10:13 PM (IST) Apr 08
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த நிலையில், சந்திப்பு ரத்தாகி உள்ளது.
09:09 PM (IST) Apr 08
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக சாலையின் இருபுறங்களிலும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாஜக கட்சியின் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பை பிரதமருக்கு அளித்தனர்.
07:39 PM (IST) Apr 08
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வணக்கம் தமிழ்நாடு என்று உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
07:07 PM (IST) Apr 08
பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
06:31 PM (IST) Apr 08
ராஜகோபாலாச்சாரியின் கொள்ளு பேரனும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சி.ஆர்.கேசவன் இன்று பாஜகவில் இணைந்தார்.
06:08 PM (IST) Apr 08
பண்டைக்கால விஷயங்கள் இன்றும் இளைஞர்கள் மனதில் உள்ளது. திருக்குறளில், புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற'' என்று திருவள்ளுவர் கூறி இருப்பார். - சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.
05:17 PM (IST) Apr 08
வணக்கம் சென்னை என சென்னையின் கழுகு பார்வை வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்ட மோடி...
05:14 PM (IST) Apr 08
இயக்குனர் வெங்கட் பிரபு கைது என்றும், சிறிது நேரம் காத்திருங்கள் முழு விபரம் பிறகு என்று தகவல் வெளியாகி உள்ளது.
04:54 PM (IST) Apr 08
திரைப்பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூருக்கு சொந்தமான ரூ.39 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
04:34 PM (IST) Apr 08
04:31 PM (IST) Apr 08
தமிழகத்தில் சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை-கோவை இடையே தமிழகத்திற்குள் இயங்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
04:12 PM (IST) Apr 08
தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு காந்தியின் தமிழ்நாடு பயணம் குறித்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி வரவேற்றார்.
03:19 PM (IST) Apr 08
பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
02:22 PM (IST) Apr 08
ஐதராபாத்தில் செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
02:19 PM (IST) Apr 08
பிற்பகல் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மாலை 4 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியின் போது மற்ற ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
மாலை 4:45 மணிக்கு, சென்னையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.
மாலை 6:30 மணிக்கு, சென்னை ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார். அங்கு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
01:45 PM (IST) Apr 08
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
01:44 PM (IST) Apr 08
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். அந்த கட்டிடத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
01:03 PM (IST) Apr 08
தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
01:00 PM (IST) Apr 08
சென்னை வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். நீட் தேர்வு விலக்கு, நிலக்கரி விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் மனு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12:58 PM (IST) Apr 08
பிரதமர் மோடியை விமான நிலையத்தில் தனியாக சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு 10 நிமிடங்கள் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12:41 PM (IST) Apr 08
காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.
12:39 PM (IST) Apr 08
செகந்திராபாத் - திருப்பதி இடையேயான வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக் வைத்தார்.
11:23 AM (IST) Apr 08
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை.
11:22 AM (IST) Apr 08
சென்னையில் சாலை விபத்தில் சிக்கிய பசுமாட்டை பால்வளத்துறை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
08:54 AM (IST) Apr 08
இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
08:54 AM (IST) Apr 08
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். இதனையடுத்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மோடி நாளை இரவு கர்நாடாக மாநிலம் சென்ற பின்னர் மீண்டும் 9 ஆம் தேதி உதகைக்கு வரவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
07:57 AM (IST) Apr 08
முந்தைய அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
07:54 AM (IST) Apr 08
பிரதமர் மோடி நாளை (ஏப்.8) சென்னை வருவதையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
07:48 AM (IST) Apr 08
கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பன்னாட்டு விமான நிலையங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
07:11 AM (IST) Apr 08
தேசத்திற்கும் கட்சிக்கும் சேவை செய்து வரும் ஹெச்.ராஜாவுக்கு, பத்மஸ்ரீ அல்லது பத்ம பூஷன் விருது வழங்க வேண்டுமென நடிகை காயத்ரி ரகுராம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.