Tamil News Live highlights கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

12:12 AM (IST) Jun 05
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை பிரபல தொழிலதிபர் அதானி மற்றும் கிரிக்கெட் வீரர் சேவாக் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.
11:35 PM (IST) Jun 04
தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
10:44 PM (IST) Jun 04
ரயில்வே அமைச்சர் என் பக்கத்தில் இருந்தார். நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். நான் தவறாக எதுவும் சொல்லவில்லை.' ஒடிசா ரயில் விபத்து குறித்து மம்தா பானர்ஜி இன்று விளக்கம் அளித்தார்.
10:25 PM (IST) Jun 04
காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர் காவலர்களுக்கு மறுக்கக் கூடாது என்றும், துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
08:29 PM (IST) Jun 04
ஒடிசா ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
08:01 PM (IST) Jun 04
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
07:03 PM (IST) Jun 04
'தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை' என்று ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
06:39 PM (IST) Jun 04
ஒடிசா பாலசோர் ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் என்றால் என்ன, அது எப்படி பழுதடையும் என்பதை ரயில்வே நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
06:10 PM (IST) Jun 04
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய ரயில்வே வாரியம், சிக்னலில் சில கோளாறுகள் இருந்ததாக தெரிவித்துள்ளது
06:09 PM (IST) Jun 04
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை தெரியாமல் இருந்த நிலையில், அதில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்
05:40 PM (IST) Jun 04
கோவையை பெருமைப்படுத்தும் விதமாக காதணி விழாவிற்கு கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
05:26 PM (IST) Jun 04
இந்து மத கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
04:44 PM (IST) Jun 04
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
03:47 PM (IST) Jun 04
பாண்டிச்சேரியில் உள்ள ரேடியர் மில் பகுதியில் லால் சலாம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு ரஜினியை காண ஆவலோடு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு ரஜினி ஷூட்டிங் முடிந்து வெளியே வந்தபோது அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
02:54 PM (IST) Jun 04
39 வயதாகியும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
01:43 PM (IST) Jun 04
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் அன்பே சிவம் படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது வைரலாகி வருகிறது.
01:04 PM (IST) Jun 04
கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகளின் இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால கொள்ளப்பட்டதில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 8 நபர்களின் விவரங்கள் கிடைத்திருந்த நிலையில் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது .
12:59 PM (IST) Jun 04
இந்திய ரயில்வேயில் 13,000 இன்ஜின்களில் வெறும் 65 க்கும் மட்டுமே கவச் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், இந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
12:58 PM (IST) Jun 04
உலகின் முக்கிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்கிரி-லா பாதுகாப்புக் கூட்டத்திற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது
12:38 PM (IST) Jun 04
மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து புகழ்பெற்ற ஷகீலா, ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கியதாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
11:36 AM (IST) Jun 04
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
10:59 AM (IST) Jun 04
என்.எஸ்.கே கொடுத்த 1 ரூபாய் சம்பளத்தை கலைஞர் கருணாநிதி ஒரே நொடியில் ரூ.10 ஆயிரமாக மாற்றிய சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:15 AM (IST) Jun 04
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பிள்ளையார் சிலையை அகற்றியதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் தவறான தகவல் பரப்புவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
10:09 AM (IST) Jun 04
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரைப்பாற்றிய 15 சுவாரஸ்ய தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:59 AM (IST) Jun 04
ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்திய வீரர்கள் இருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
08:15 AM (IST) Jun 04
ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
07:09 AM (IST) Jun 04
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து பேசினர்.
07:08 AM (IST) Jun 04
ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்