இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 30.05.2023

Published : May 30, 2023, 08:06 AM ISTUpdated : May 30, 2023, 09:24 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 30.05.2023

சுருக்கம்

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 30.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.  

அமலாக்கத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்த பதிவு சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று தற்போது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உடன் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்தது பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி. தினகரன் உடன் வைத்திலிங்கம்

திமுக ஆட்சி அமைக்க வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தவர்கள் இஸ்லாமிய மக்கள். பேரறிவாளன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது போல் ஜனநாயக அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். வேல்முருகன் வலியுறுத்தல்.

வேல்முருகன்

ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி ஐபிஎல் 2023 டைட்டிலை வென்றுள்ளது. இதன் மூலம் சென்னை சிஎஸ்கே அணி 5வது முறையாக வெற்றிவாகை சூடியுள்ளது.

ஐபிஎல்

எந்தவித முறைகேடு இல்லாமல் இன்றைக்கு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியயோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சின்மயி
 

மைசூரில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் விபத்து

காரைக்குடியில் பிரபல திரையரங்கில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திரையரங்கத்தில் செயல்படும் உணவகத்திற்கு சீல் வைத்துச் சென்றனர்.
பப்ஸ் சாப்பிட்ட பூனை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 ஜப்பானிய நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் P.S.பார்க் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் பக்கெட்டில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி கொண்டு இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக செல்போனில் பதிவுகளை எடுத்து பதிவிட்டு இடையூறு செய்தும், இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக செயல்பட்டவரை, ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து, மூன்று வழக்குகள் பதிவு செய்து அபராதமாக ரூ.3500/- விதிக்கப்பட்டது.

நடுரோட்டில் குளித்த இளைஞர்; 3,500 அபராதம்

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணை திறப்பு

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி அடைந்துள்ள நிலையில் அரசு பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமதாஸ் கோரிக்கை

மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான் கண்டனம்

அரசுப் போக்குவரத்து தறையில் தனியார் மூலம் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலுக்குப் பின் மீண்டும் இயக்கம்

அமைச்சர் சிவசங்கர்

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதற்கு தமிழ் அறிஞர்கள் பாராாட்டு தெரிவித்திருக்க வேண்டும் மாறாக விழாவை புறக்கணித்திருக்கிறார்கள். இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

ஜார்க்கண்ட் மாநில ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் நிசித்பூர் என்ற ஊரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும்போது தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது தண்டவாளத்தில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக சிக்கிய 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழப்பு

கர்நாடக அமைச்சரவை இலாகாக்கள் வெளியீடு: சித்தராமையாவுக்கு நிதி; சிவகுமாருக்கு 2 இலாகா! 32 பேர் கொண்ட அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான பரமேஸ்வராவுக்குக் கிடைத்துள்ளது. 2 இஸ்லாமியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடக அமைச்சரவை

பாடகி சின்மயி உள்பட கவிஞர் வைரமுத்து மீது இதுவரையில் 19 பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் கூட அவர் மீது இதுவரையில் ஒரு எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை கேள்வி

மணிப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி 40 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்ற, நிலையில், இன்று ஒரு போலீஸ் உட்பட மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் வன்முறை

வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

நாம் ஏதோ பாவம் செய்து விட்டோம். நன்றாக சென்று கொண்டிருந்த அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சி வந்துவிட்டது என மக்கள் நினைப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு

PREV
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!