தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 ஜப்பானிய நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஜப்பான் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் பயணித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பயணத்தைத் தொடங்கிய முதல்வர் 2 நாட்கள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அவருடன் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் உயர் அதிகாரிகளும் உள்ளனர்.
சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலுக்குப் பின் மீண்டும் இயக்கம்

இந்நிலையில், இன்று காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் அழைப்பு விடுத்தார்.
மாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன் தமிழக அரசு ரூ.818.90 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்... ஜூன்.12 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!!

ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரம்:
1. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கியோகுட்டோ சாட்ராக் (KyoKuto Satrac) நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில், 113.90 கோடி ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.155 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையே, கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் தொடர்புடைய வணிகத்தை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இணையத்தில் வைரலாவதற்காக நடுரோட்டில் குளித்த இளைஞர்; 3,500 அபராதம் விதித்து வைரலாக்கிய காவல்துறை

4. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே, ரூ.200 கோடி முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், கட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான எக்ஸ்ட்ருஷன் லைன்கள் (extrusion lines for electronic components for use in construction industry) ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ-ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato-Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே, ரூ.200 கோடி முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
6. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், டஃப்ல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே, ரூ.150 கோடி முதலீட்டில் சோலார், எஃகு ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி (stainless steel specialized flexible hoses) செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.
செங்கோலை வைத்து அரசியலா? இவர்களை தமிழ் அன்னையே மன்னிக்க மாட்டார் - தமிழிசை காட்டம்
