Shivlingi beej seeds: ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யும் ஐவிரலி விதை.. தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

First Published Oct 18, 2022, 2:28 PM IST

Health benefits of  shivlingi beej seeds : ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்ய, நீங்கள் உங்கள் உணவில் ஐவிரலி மூலிகை சேர்த்துக் கொள்வது, பாலுணர்வை தூண்டுவது மட்டுமின்றி, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

ஆண்களுக்கு ஏற்படுகின்ற விந்தணு குறைபாடு காரணமாகவே ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. சமீப காலங்களில் இந்த ஆண் மலட்டுதன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு உணவு முறை, வாழ்கை முறை மாற்றம் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.

 இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் உணவில் ஐவிரலி மூலிகை சேர்த்துக் கொள்வது அவசியம். இவை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பாலுணர்வை தூண்டுவது மட்டுமின்றி, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஐவிரலி மூலிகை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க...Belly Button: தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்ந்து விடாமல் சுத்தம் செய்வது ஏன் அவசியம் .? மிஸ் பண்ணீடாதீங்கோ.!

ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த ஐவிரலி விதை மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலுணர்வை தூண்டுவது முதல் மலச்சிக்கல், நீரிழிவு, புற்றுநோய் கட்டிகள் போன்ற ஏராளமான பிரச்சினை சரிசெய்ய இந்த ஐவிரல் மூலிகை பயன்படுத்தப்படுகிறது.  

இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு பொதுவாக இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று, ஒழுங்கற்ற மாதவிடாய், வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள், கருவுறாமை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்றவை ஆகும். இது ஹார்மோன் மாற்றங்களாலும் கருப்பையில் உண்டாகும் சில பிரச்சினைகளாலும் ஏற்படுகிறது. அதனாலேயே திருமணத்துக்குப் பின்பு கருததரிக்கும் வாய்ப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். பெண்ணின் ஒரு பொதுவான மாதவிடாய் சுழற்சிகாலம் என்பது 21 முதல் 35 நாட்கள் வரை என கருதப்படுகிறது. 

இந்த பிரச்சினையை சரிசெய்து மாதவிடாயை ஒழுங்குபடுத்த, ஐவிரலி  எடுத்துக் கொள்ளுங்கள். இது பெண்களுக்கு மட்டுமல்லாது, ஆண்களுக்கும் இருக்கும் ஆண்மைக் குறைபாட்டை சரிசெய்து பாலுணர்வை தூண்ட செய்கிறது.

 விந்தணு எண்ணிககையை அதிகரிக்கச் செய்வதோடு, டெஸ்டோஸ்டெரோன் அளவை கணிசமாக அதிகரிக்கச் செய்வதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இதனை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Belly Button: தொப்புள் பகுதியில் அழுக்கு சேர்ந்து விடாமல் சுத்தம் செய்வது ஏன் அவசியம் .? மிஸ் பண்ணீடாதீங்கோ.!


தினமும் எப்படி சாப்பிட வேண்டும்?

ஐவிரலி விதைகள் வேண்டும் என்றால், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி அப்படியே நீரில் கலந்தும் பயன்படுத்தலாம். இதனால், ஆண்மை குறைபாட்டினை சரி செய்து பாலுணர்வை தூண்டி, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும்.

சரும அழற்சி பிரச்சனை இருப்பவர்கள், ஐவிரலி இலையின் பொடி அல்லது இலையை பேஸ்ட் போல அரைத்து பயன்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், காய்ச்சல், மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் ஐவிரலி பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.

பின் குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஐவிரலி கலந்து குடிக்க வேண்டும். இந்த அதேபோல் சாப்பிட 2 மணி நேரம் கழித்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

click me!