தலைவலி வந்தால் உடனே மாத்திரை போடுறீங்களா? அது எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா?

By Ramya sFirst Published Sep 25, 2024, 11:31 AM IST
Highlights

தலைவலி வந்தால் உடனடி நிவாரணம் பெற வலி நிவாரணிகளை ஏன் ஆபத்தானது? அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வேகமான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்கள், உட்கார்ந்த் வாழ்க்கை முறை என பல காரணங்கள் நம்மில் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த வகையில் நம்மில் பலருக்கும் தற்போது தலைவலி என்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மன அழுத்தம், தூக்கமின்மை, நீரிழப்பு, என பல காரணங்கள் தலைவலி ஏற்படலாம்.

பொதுவாக தலைவலி ஏற்படும் போது காபி அல்லது டீ குடித்தாலே சரியாகிவிடும். ஆனால் தாங்க முடியாத அளவுக்கு தலைவலி ஏற்படும் நாம் பெரும்பாலும் உடனடி நிவாரணம் பெற அடிக்கடி வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறோம். இதனால் தலைவலி உடனே சரியாகும். ஆனால் வலிநிவாரணிகள் உடலுக்கு பல வகையான தீங்குகளை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

Latest Videos

தலைவலி இருந்தால் உடனடியாக வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம்

தலைவலி வந்த உடனேயே வலி நிவாரணிகளை உட்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஏனெனில் அது பல வகையான தீங்குகளை ஏற்படுத்தும். வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும். இது வலி, வீக்கம் மற்றும் பல செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வயிற்றுப் புண்களின் அபாயமும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களிலும் இது ஆபத்தான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. தீவிர இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் கணிசமாக அதிகரிக்கிறது.

உடல் பருமன், இதய நோய்கள் மட்டுமல்ல; ஜங்க் ஃபுட்டால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பும் ஏற்படுமாம்!

 தலைவலிக்குப் பிறகு உடனடியாக எந்த விதமான வலிநிவாரணியையும் எடுத்துக்கொள்வது நிவாரணம் அளிக்கலாம் ஆனால் அது நீண்ட காலத்திற்கு கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, தலைவலி வந்த உடனேயே மருந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை அறியலாம்.

ஏன் தலைவலி வந்தால் உடனே மருந்து சாப்பிடக்கூடாது?

தலைவலியில் இருந்து நிவாரணம் பெற, பெரும்பாலான மக்கள் உடனடியாக வலி நிவாரணிகளை எடுத்து அவற்றை உட்கொள்கின்றனர். கடைகளில் மருந்துகளை உட்கொள்வது ஓரளவு மட்டுமே பாதுகாப்பானது. வலிநிவாரணிகள் அல்லது ஏதேனும் மருந்தை அதிகமாகவோ அல்லது அடிக்கடி உட்கொள்வதும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை வாங்கும் பழக்கமும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இது உடலில் பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

தலைவலிக்கு உடனடியாக மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

மருந்துகளின் அளவுக்கதிகமான அளவு வயிறு, நரம்பு மண்டலம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இது வலி, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தலைவலிக்கு அதிக வலி நிவாரணிகளை உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மருந்தை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அழிக்கப்படும்.

தலைவலிக்கு அதிக வலி நிவாரணிகளை உட்கொள்வது கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

தலைவலி ஏற்படும் போது அடிக்கடி வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.

ஆனால் ஒரு சில குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் தலைவலியை குறைக்கலாம்.

தண்ணீர் குடிப்பது

உகந்த அளவில் தண்ணீர் குடிப்பது தலைவலியைத் தடுக்க உதவும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் பகலில் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். நீங்கள் போதுமான அளவு நீரேற்றமாக இருந்தால், தலைவலி ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் அதே நேரம் ஆல்கஹால் அல்லது காபி போன்ற நீரிழப்பு பானங்களையும் தவிர்க்கவும். காஃபின் சில நேரங்களில் தலை வலியைப் போக்க உதவும், ஆனால் அது நீரிழப்புக்கும் வழிவகுக்கும். எனவே அளவோடு அருந்தவும். மறுபுறம், மது பானங்கள் அடுத்த நாள் தலைவலியை ஏற்படுத்தும்.

வெண்டைக்காய் நல்லதுதான்; ஆனா இவங்களுக்கு மட்டும் எதிரி!!

6-7 மணி நேரம் தூக்கம்

மோசமான தூக்க முறைகள் தலைவலியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் போதுமான தூக்கம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இன்றியமையாதது. தூங்கும் போது தான், உங்கள் மூளை மற்றும் உடல் சிறப்பாக செயல்பட உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது. எனவே தலைவலி வராமல் இருக்க குறைந்தது 6-7 மணிநேரம் நன்றாக தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறைவாக சாப்பிட வேண்டாம்

உங்கள் உணவுப் பழக்கம் பெரும்பாலும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகிய இரண்டுடனும் தொடர்புடையது. மிகக் குறைவாக சாப்பிடுவது, அதாவது பகலில் 1000 கலோரிகளுக்குக் குறைவான உணவை உட்கொள்வது, உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் உடல் செயல்பாட்டிற்கு தேவையான குறைந்த கலோரிகளை நீங்கள் உட்கொள்வதால் இது ஏற்படுகிறது, எனவே, ரத்த குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்து, தசை பதற்றம் மற்றும் தலைவலியை ஏற்படுத்துகிறது. இதேபோல், நீங்கள் மதியம் 1 மணிக்கு மதிய உணவையும் இரவு 9 மணிக்கு இரவு உணவையும் சாப்பிட்டால், உணவுக்கு இடையில் இடைவெளி இருப்பதால் உங்கள் உடல் தலைவலியைத் தூண்டும். எனவே உணவுக்கு இடையில் ஆரோக்கியம் சிற்றுண்டி சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், உணவைத் தவிர்க்க வேண்டாம்.

நடைபயிற்சி

பலருக்கு, மடிக்கணினி அல்லது கணினியில் வேலை செய்யும் போது மோசமான தோரணையால் கழுத்து விறைப்பதால் தலைவலி ஏற்படுகிறது. நாம் அனைவரும் தட்டச்சு செய்யும் போது தலையை குனிந்து வேலை நேரங்களுக்கு இடையில் நகர மாட்டோம். கடுமையான வேலையினால் ஏற்படும் தலைவலியைத் தவிர்க்க 5 நிமிடங்களுக்கு விரைவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

அதிக திரை நேரம் அல்லது நேரடி சூரிய ஒளியில் இருப்பது தலைவலிக்கு வழிவகுக்கும். எனவே, உங்களுக்கு தலைவலி ஏற்பட்டவுடன், ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும் அல்லது ஏதாவது சாப்பிடவும். நீங்கள் வேலையில் இருந்தால் 10 நிமிடம் தூங்கலாம், ஆனால் ஒவ்வொரு முறை தலைவலி ஏற்படும் போதும் மாத்திரை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

click me!