தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரு சிலரே... பாலிவுட் திரையுலகில் நுழைந்து, வெற்றிகரமான நடிகையாக மாறுகிறார்கள். அந்த லிஸ்டில் சமீபத்தில் இடம்பிடித்தவர் தான் ராஷ்மிகா மந்தனா.
டோலிவுட், கோலிவுட், பாலிவுட், என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக... படு பிஸியான இளம் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா, சமீபத்தில் டோக்கியோவில் நடந்த அவார்டு நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார்.
ஜப்பான் நாட்டுக்கு சென்றது குறித்து... அவர் போட்ட பதிவிலும், "ஜப்பான் நான் பல வருடங்களாகப் போக வேண்டும் என்று கனவு கண்ட இடம்.. சிறுவயதில் இருந்தே... இது சாத்தியப்படும் என்று நினைக்கவே இல்லை.. அனிமேஷனை உருவாக்கியவர்களில் ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டுக்கு வருடத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டும் என, அங்கு அனைவரும் தன் மீது அன்பை பொழிந்ததாகவும் தெரிவித்த ராஷ்மிகா... தற்போது டோக்கியோ சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.