அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்.. அலர்ட் மெசேஜ்.!

First Published May 9, 2024, 9:01 AM IST

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Heatwave in Tamilnadu

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். 

Tamilnadu Rain

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் தரமான சம்பவம் இருக்காம்! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

Heavy Rain

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Department

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 10 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Tamil Nadu Weather update: ஜெய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறக்கப் போகுது.. கோடையில் கொட்டப் போகுது மழை!!

click me!