Heatwave in Tamilnadu
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர்.
Heavy Rain
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.