Coimbatore : பகவத் கீதை தியான ஸ்லோகங்கள்.. அழகாக கூறி அசத்தும் 7 வயது சிறுவன் - படைக்கப்பட்ட உலக சாதனை!

Coimbatore : பகவத் கீதை தியான ஸ்லோகங்கள்.. அழகாக கூறி அசத்தும் 7 வயது சிறுவன் - படைக்கப்பட்ட உலக சாதனை!

Ansgar R |  
Published : May 14, 2024, 11:20 PM IST

Asian World Record : கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன், ஆன்மீக வாசகங்களை கூறி ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அச்சிறுவன் குறித்து இந்த பதிவில் காணலாம்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன், நீலம் தம்பதியரின் மகன் தான் 7 வயது நிரம்பிய திரிசூல வேந்தன். 4ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது, அனுமன் சாலிஷா என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றவராக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள ராதா என்பவர், வேந்தன் பகவத் கீதாயை ஆர்வமுடன் படிப்பதை கண்டு, பகவத் கீதையின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை கூறி பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் ஒன்பது அத்தியாங்கள் கொண்ட கீதா தியானா ஸ்லோகங்களை அச்சு பிசகாமல் தெளிவாக கூற துவங்கியுள்ளார்.

சிறுவன் திரிசூல வேந்தனுக்கு முறையாக அளித்த பயிற்சியால், சமஸ்கிருத மொழியில் கீதா தியானா ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி அசத்தியுள்ளார். இவரது இந்த சாதனை ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இது குறித்து சிறுவன் கூறுகையில், ஏற்கனவே பஞ்சாங்கத்தை தாம் வேகமாக படித்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக கீதா தியானா ஸ்லோகங்களை கூறுவதில் பயிற்சி பெற்றதால் இந்த சாதனையை செய்ய முடிந்த்தாக கூறினார். 

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
Read more