ஜீ தமிழ் சீரியலில், ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் அர்த்திகா, வாய்ப்புக்காகவும், தன்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சிலர் பேசியுள்ளதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசி அதிரவைத்துள்ளார்.
அப்படி தான் இதுவரை 4 படங்களில் சீரியல் நடிகை அர்த்திகா நடித்திருந்தாலும், இதுவரை ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்நிலையில் சேது பட நடிகை அபிதா மூலம், அர்த்திகாவுக்கு 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்த சீரியல் நாயகன் கார்த்தியுடன் அர்த்திகா ஒயிட் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு வருபவர்களிடம்... "இப்போது தெரியாமல் வந்து பேசி விட்டீர்கள். இனிமேல் இப்படி என்னிடம் இப்படி பேசவேண்டாம் என மூச்சில் அடித்தது போல் நேரடியாகவே பேசி விடுவேன். சினிமா மற்றும் சீரியலில் நடித்தே ஆக வேண்டும் என்கிற நிலைமை எனக்கு இல்லை. இது இல்லை என்றால், வேறு ஏதாவது வேலை பார்த்து பிழைத்துக்கொள்ள என்னால் முடியும்.
அதே நேரம் சினிமாவில் பல பெண்கள் வாய்ப்புக்காகவும், பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள். சிலர் அப்படி செய்வதால் தான், மற்ற பெண்களை பார்க்கும் போதும் இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வார்களா? என நினைத்து இப்படி பட்ட கேள்வியை எழுப்புகிறார்கள்.