முடி உதிர்தல் பிரச்சனை இன்றைய காலத்தில் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது. பல வழிகளில் முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை. நாட்கள் செல்லச் செல்ல இப்பிரச்சினை அதிகரித்து கொண்டே தான் இருக்கும். இது அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எனவே முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
ஒரு நாளைக்கு 100 முடி உதிர்வது சகஜம். ஆனால் அதைவிட அதிகமான முடிகள் இருப்பது ஒரு பிரச்சனையாகவே கருத வேண்டும். அதிகப்படியான முடி உதிர்தல் இறுதியில் வழுக்கைக்கு வழிவகுக்கிறது. இந்த பிரச்சனையை போக்க கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். இந்த இலை சமையலின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் மிகவும் நல்லது. அதை எப்படி பயன்படுத்துவது? இங்கே தெரிந்து கொள்வோம்..
கறிவேப்பிலையுடன் வெந்தயத்தை கலந்து தலைமுடியில் பூசுவது சிறப்பான பலனைத் தரும். இதற்கு நெல்லிக்காய் சாறு மற்றும் வெந்தய விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை சாறு சேர்க்கவும். பின்னர் இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவவும்.
மேலே குறிப்பிட்டுள்ள ஹேர் பேக்குகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனை நீங்குவதுமட்டுமின்றி முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D