அறைய வந்த ரம்யாவை அடக்கிய கார்த்தி... ஹீரோயிசத்தால் வேலை பறிபோனதா? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published May 9, 2024, 3:48 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி விவாகரத்து கேட்க ஆனந்த் அந்த டாகுமெண்டை கிழித்து போட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி விவாகரத்து கேட்க ஆனந்த் அந்த டாகுமெண்டை கிழித்து போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக் ஆபிசில் எல்லாரும் வேலை செய்து கொண்டிருக்க ரம்யா ரவுண்ட்ஸ் வரும் போது ஒருவன் கையில் வைத்திருந்த பார்ட்ஸை கிழே தவற விடுகிறார்.

Zee Tamil Karthigai deepam serial

அதை பார்த்த ரம்யா நீ எல்லாம் வேலை செய்ய தகுதியே இல்லாதவன் என்று கண்டபடி திட்டுவது மட்டுமின்றி அவனை அறைய போகும் சமயத்தில் கார்த்திக் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறான். தப்பு பண்ணா திட்டுற உரிமை உங்களுக்கு இருக்கு, ஆனால் ஒரு தொழிலாளியை கை நீட்டி அடிக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்று சொல்லி ரம்யாவை அடக்க, அவள் கோபமாக கேபினுக்கு செல்கிறாள். மாணிக்கம் அவ்வளவு தான் இன்னைக்கு உன்னை வேலையை விட்டு அனுப்ப போறாங்க என்று சொல்கிறார். 

இதையும் படியுங்கள்... முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காஜல் அகர்வால்... லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Karthigai deepam serial Update

அதே போல் ரம்யா மேனேஜரை கூப்பிட்டு அந்த கார்த்திக்கை வர சொல்லுங்க இன்னைக்கே அவனை வேலையில் இருந்து துரத்துறேன் என்று சொல்ல, மேனேஜர் ரம்யாவை அடக்க, கார்த்திக் வேண்டும் என்பதால் அவனை இப்போ அனுப்பிட்டா நீங்க தோற்று போன மாதிரி ஆகிரும் என்று சொல்லி அவளது மனதை மாற்ற, கார்த்திக்கை கூப்பிட்டு நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு, ஹீரோயிசம் காட்டுற வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாள். 

Karthigai deepam serial Today Episode

அடுத்து அபிராமி வீட்டில் ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் ஏதோ மாத்திரை போட்டு அந்த அட்டையை வெளியே தூக்கி போட, தீபா இதை கவனித்து அந்த அட்டையை எடுத்து சென்று மீனாட்சியிடம் கொடுத்து என்ன மாத்திரை என்று விசாரிக்க, பீரியட் தள்ளி போவதற்கான மாத்திரை என்று தெரிய வருகிறது. இதனால் ஏதோ தப்பா இருக்கே என்று ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : தொடரும் வசூல் வேட்டை... ரஜினி படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஆறே நாளில் அடிச்சு தூக்கிய அரண்மனை 4

click me!