கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!

கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!

Published : May 09, 2024, 03:43 PM IST

ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் உற்சவ சிலை பக்தர்களால் தூக்கிவரப்பட்டு வீதி உலா நடைபெற்றது. 

வத்தலகுண்டு முத்துமாரியம்மன் வைகாசி திருவிழா கொட்டும் மழையில் வீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான அம்மன் வீதி உலா வந்து மண்டகப் படிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சி தொடங்கியது. 

ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் உற்சவ சிலை பக்தர்களால் தூக்கிவரப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான சிறுமியர்கள் கோலாட்டம் ஆடி முத்துமாரியம்மனை வரவேற்றனர். முத்துமாரியம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது திடீரென கோடை மழை கொட்டியது இருப்பினும் கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது.

இன்று  பிலீஸ்புரம், மஞ்சள் ஆற்றங்கரை குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப் படிகளில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!