தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் ஓவ்வொரு நடிகையும், அறிமுகமாகின்றனர். ஆனால் அதற்க்கு கொஞ்சம் அதிஷ்டமும் வேண்டும் புத்திசாலி தனமும் வேண்டும் என்பதை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே நிலைக்க முடியும். இப்படி அதிஷ்டம் மற்றும் புத்திசாலித்தனம் இருப்பதால் தான், சமந்தா, நயன்தாரா, மஞ்சு வாரியர், த்ரிஷா ஆகியோர் 35 வயதை கடந்த பின்னரும் முன்னணி இடத்தில் உள்ளனர்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வரு ஹீரோயினாக நடித்த படங்கள் பெரிதாக வெற்றியை கைப்பற்றாத நிலையில், புத்திசாலித்தனமாக யோசித்து... அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பல படங்களில் வில்லியாக நடித்து மிரளவைத்தார்.
அதன்படி ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் கனிமொழி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு அப்பா மற்றும் சித்தியுடன் சென்று பத்திரிக்கை வைத்த வரு, இன்று நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனை அவர்கள் வீட்டில் சந்தித்து பத்திரிக்கை வைத்துள்ளார். அதே போல் நடிகர் சித்தார்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.